மகளிர் உரிமைத் தொகை பெற மீண்டும் வாய்ப்பு
சென்னை, மார்ச் 28 - கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இதுவரை பெறாத தகுதி வாய்ந்த மகளிர், புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். “கலை ஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம், கடந்த 19 மாதங்களில் மட்டும், 21 ஆயிரத்து 657 கோடி ரூபாய் உரிமைத் தொகையாக மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குணால் கம்ராவுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமீன்!
சென்னை, மார்ச் 28 - மேடை நையாண்டி நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன் றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அரசியல் நையாண்டி மேடை நடிகர் குணால் கம்ரா. இவர், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிர மாநி லத்தின் அரசியல் சூழலைக் கேலி செய்து நிகழ்ச்சி நடத்தி யிருந்தார். இதில், மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு குணால் கம்ரா நையாண்டி செய்திருந்தார். இதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதுதொடர்பாக குணால் கம்ரா தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்று, அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி யுள்ளது. ஏப்ரல் 7 வரை கம்ராவை கைது செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.