tamilnadu

img

சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் மகளிர் தின விழா!

சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் மகளிர் தின விழா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகத்தில் சர்வ தேச மகளிர் தின நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தாரா வரவேற்புரையாற்றினார். நர்மதா தேவி உறுதி மொழியேற்பு உரை வாசித் தார். கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் சிறப்பு ரையாற்றினார்.  அவர் தமது உரையில்,  “சர்வதேச மகளிர் தின  நிகழ்வுகள் குறித்தும், உழைக்கும் பெண்கள்  மீதான சுரண்டலை ஒழிக்க வும், பாலின பாகுபாடுகளை களையவும், பெண்களின் உரிமைகள் காக்கும் போராட் டங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சமரச மற்ற முறையில் வலுவாக முன்னெடுக்கும்” என குறிப் பிட்டார். சிநேகா நன்றி கூறி னார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வெ. ராஜ சேகரன், இரா. சிந்தன், இரா. சுதிர், க. சரவணன் மற்றும்  மாநிலக்குழு அலுவலக- சமூக ஊடக கிளையினர் பங்கேற்றனர்.