கோயம்புத்தூர், டிச. 20- கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்த அவினாசியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் காணாமல் போனதாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண் ஈஷா மையத்தில் இருந்து பதறி யடித்து சாலையில் ஓடும் சிசிடிவி காட்சி கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. போலிச் சாமியார் ஜக்கியின் ஈஷா மையத்தில் அடுத்தடுத்து நடை பெறும் மர்மச் சம்பவங்கள் அதிர்ச்சி யை ஏற்படுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவினாசி யைச் சேர்ந்த பழனிகுமார். இவரது மனைவி சுபஸ்ரீ. கணவன் - மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற னர். சுபஸ்ரீ கடந்த நான்கு வருடமாக ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வரு கின்றார். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் நடை பெற்ற “சைலன்ஸ்” என்ற ஒரு வார யோகா பயிற்சிக்காக ஈஷா மையத்தில் சுபஸ்ரீ தங்கியுள்ளார்.
கடந்த 18ஆம் தேதியுடன் பயிற்சி முடிவடைந்த நிலையில் மனைவியை அழைத்துச் செல்ல கணவர் பழனிக் குமார் ஈஷா மையத்திற்கு வந்து காத்தி ருந்தார். 11 மணியில் இருந்து, பயிற்சி க்கு வந்த எல்லோரும் வெளியேறி விட்ட நிலையில் சுபஸ்ரீ மட்டும் வெளியே வரவில்லை. மாலை 3 மணி வரை காத்திருந்த பழனிக்குமார் ஈஷா மைய நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். பயிற்சிக்கு வந்த அனைவரும் சென்று விட்டதாக ஈஷா யோகா மைய நிர்வாகி கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுபஸ்ரீ காலை 9.30 மணிக்கே ஈஷா மையத்தில் இருந்து வெளியில் சென்றதும், ஈஷாவில் இருந்து இருட்டுப் பள்ளம் பகுதி வரை கால் டாக்ஸியில் சென்றதும், பின்னர் அவர் அங்கிருந்து பதற்றத்துடன் பத றியடித்து ஓடிச்செல்வதும் பதிவாகி யுள்ளது.
இதுதொடர்பாக பழனிக்குமார் ஆலந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆலந்துறை போலீசார், செம்மேடு பகுதியில் 18 ஆம் தேதி பதி வான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி னர். அதில் ஈஷா மையத்தில் யோகா பயிற்சியின் போது அணியும் வெள்ளை நிற ஆடையுடன் சுப ஸ்ரீ ஓட்டமும், நடையுமாக செல்லும் காட்சிகளும் பதி வாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சி களை வைத்தும் கடைசியாக அந்தப் பெண் பயணித்த கால் டாக்ஸி ஓட்டுனரி டமும் விசாரணை நடத்தி வருகின்ற னர். மேலும் சாலையில் அந்தப் பெண் செல்லும் பொழுது ஒருவரிடம் செல்போ னை வாங்கி பழனிக்குமாருக்கு பேச முயற்சித்து இருப்பதும் விசாரணை யில் தெரியவந்தது. இந்நிலையில் சுபஸ்ரீ மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். ஈஷா யோகா மையத்துக்கு பயிற்சிக்கு வந்த அனைவரும் 11 மணிக்கு வெளியேறிய நிலையில், முன்னதாகவே சுபஸ்ரீ வெளியேறியது ஏன் என்றும், ஒரு வார காலம் ஈஷா மையத்தில் தங்கியிருந்த அவர் தனது உடமைகளைக்கூட எடுக்காமல் பயிற்சி க்காக அணிந்திருந்த உடையுடன் காலில் செருப்புகூட அணியாமல் பதறி யடித்து ஓடுவதன் காரணமென்ன என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் அடுத்தடுத்து நடை பெறும் மர்மங்கள், விதிமீறல்கள் என சர்ச்சைகள் தொடரும் நிலையில், பயிற்சி மையத்திற்கு வந்த பெண் ஒருவர் பதறியடித்து வெளியே ஓடிச் செல்லும் சம்பவம் மேலும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.