சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்
மதுரை, மே 9- புதுச்சேரி ஜிப்மர் ‘‘அலுவல் மொழி அமலாக்கம்’’ பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீற லாக அமைந்திருப்பதாக மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி., ஜிப்மர் இயக்குநர் மரு.ராகேஷ் அகர்வாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 28, 2022 அன்று ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (JIPMER) இரண்டு சுற்றறிக்கைகளை ஒரே நாளில் வெளி யிட்டுள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதோடு அதில் ஒரு சுற்றறிக்கை அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவ தாகவும் உள்ளது. முதல் சுற்றறிக்கையில் பொது ஆணைகள், அறிவிக்கை கள், தீர்மானங்கள், விதிகள், நிர்வாகம் தொடர்பான மற்றும் பிற அறிக்கைகள், ஊடக செய்திகள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், உரிமங்கள், அனுமதிகள், விலை கோரல் (டெண்டர்) மற்றும் அதற்கான படிவங்கள் உள்ளிட்ட ஆவ ணங்கள் எல்லாம் இரு மொழிகளில் அதாவது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இரண்டாவது சுற்றறிக்கையில், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பதிவேடுகள், பணி ஏடுகள், பணிக் கணக்குகள் ஆகியவற்றின் பொருள், விவரங்களின் தலைப்புகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்படும். எல்லா பதிவேடுகள், பணி ஏடுகள், பணிக் கணக்குகள் ஆகிய வற்றில் எதிர்கால பதிவுகள் இனி முடிந்த அளவிற்கு இந்தி யில் மட்டுமே செய்யப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த உறுதி மொழி ஜிப்மர் இந்தி பிரிவால், நாடாளு மன்ற அலுவல் மொழிக் குழுவிற்கு தரப்பட்டுள்ளது. இது சட்ட மீறல் மட்டுமின்றி இந்தியைத் திணிக்கிற அப்பட்டமான நடவடிக்கை ஆகும். சட்டம் இரு மொழி பயன்பாடு பற்றி பேசும்போது ‘இந்தி மட்டும்’ என்ற உறுதி மொழியை தருகிற அதிகாரம் ஜிப்மருக்கு எங்கே இருந்து வருகிறது? ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் உள்ள இந்த பிரிவுகளுக்கு ‘‘இந்தி செல்’’ என்ற பெயரே சரியில்லை. அலுவல் மொழி அமலாக்கக் குழு என்ற வகையில் ‘OLI Cell’ என்றுதான் இருந்திருக்க வேண்டும். அக்குழுவின் நோக்கமே தவறாக புரிந்து கொள்ளப்படு கிறது என்று கருதுகிறேன். அந்த ‘செல்’ சட்டத்தின் படியே செயல்பட வேண்டும். ‘‘இந்தி மட்டும்’’ என்ற உறுதி மொழி, சட்ட நியதிகளை கடந்தது ஆகும். உண்மையில், ஒன்றிய அரசின் துறை/ நிறுவனங்கள் எல்லாம் பொதுமக்களுக்கான தகவல் தொடர்புகளை தமிழில் தான் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். எனவே, இந்த சட்ட மீறல் சுற்றறிக்கையை உடனடியாக ஜிப்மர் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.