tamilnadu

img

முறைசாரா கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுமா?

எதிர்பார்ப்புடன் தென்காசி ஆட்சியரிடம் மனு

தென்காசி, மே 22- தென்காசி மாவட்ட ஆட்சி யரிடம் முறைசாரா கட்டு மானத் தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்து போராட்டம் நடத்தினர். சிஐ டியு மாவட்டத் தலைவர் எம். வேல்முருகன் தலைமை வகித்தார். ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழக அரசு அறிவித்து 2 மாதம் ஆகியும் இது வரை கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் அரிசி,  பருப்பு எண்ணெய் வழங்கா மல் தொழிலாளர்களை அலைக்கழித்து ஏமாற்றி வருவதை கண்டித்தும், நல வாரிய அட்டை வாங்கிய  அனைத்து தொழிலாளர்க ளுக்கும் நிவாரண நிதி, நிவா ரண பொருட்கள் வழங்கிட வும் வேண்டும். பென்சன்  வாங்கும் தொழிலாளர்க ளுக்கு பல மாதங்களாக  பென்சன் வழங்காமல் பட்டினி போடுவதை கைவிட்டு பென்சன்தாரர்களுக்கு வழங் காத பென்சனையும், கொ ரோனா நிவாரண நிதி, நிவார ணப் பொருட்கள் வழங்க வேண்டும்.

அனைத்து தொழிலா ளர்களுக்கும் வங்கி கணக்கு இருக்கும் போது யாருக்கும் பணம் அனுப்பாமல், தபால்  கணக்கை துவங்கிட வற்பு றுத்துவதையும் தொழிலா ளர்களை அலைக்கழிப்பதை நிறுத்திடவும், வங்கி கணக்கில் பணம் உடன டியாக செலுத்திடவும் வேண்டும். நலவாரிய அட்டைகள் புதுபித்தலுக்கு விஏஓ கையெழுத்து கட்டா யம். மேலும், தேவையில்லாத ஆவணங்கள் கேட்பதை நல வாரிய அதிகாரிகள் கை விட்டு நலவாரிய அட்டை புது ப்பித்தலுக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையை தொ டர வேண்டும்.  மத்திய அரசு கொரோனா  காலத்தில் தொழிலாளர் சட்டங்களை முதலாளி களுக்கு ஆதரவாக திருத்து வதை கண்டித்தும், 8 மணி நேர வேலையை 12 மணி  நேர வேலையாக மாற்றிய சட்டத்தை வாபஸ் வாங்கி டவும், பொதுமக்கள் பயன்ப டுத்தும் மின்சாரத்தை தனி யாருக்கு தாரைவார்த்து மின்சார கட்டணம் அதிக மாக வசூல் செய்வதை கண்டி த்தும், பெட்ரோல் டீசல்  விலையை குறைத்திட  கோரியும், பொதுத்து றைகளை தனியாருக்கு விற்ப தை கைவிடவும் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. போராட்டத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் தி.கணபதி, சிஐடியு நிர்வா கிகள், தொழிற்சங்க தலை வர் வி.எம்.ஆர். காந்தி மற்றும்  சிஐடியு தலைவர்கள் முருகே சன், கருப்பையா, ஜெசிடியு தலைவர் கே.மாரியப்பன், மாதர் சங்க தலைவர் ஆர்.சங்கரி, அய்யம்பெருமாள், சிஐடியு தலைவர்கள் மணி கண்டன், நாகரத்தினம், தம்பி துரை, பேச்சிமுத்து, ஆறுமு கம், குத்தாலிங்கம், மின் ஊழி யர் சங்க ராஜசேகர், புதிய வன்சுப்பிரமணியன், சிஐடியு முறைசாரா கட்டுமான தொழி லாளர்கள் 100 மேற்பட்டோர் பங்கேற்றனர்.