தலைநகர் தில்லியில் அக்டோபர் மாதம் தொடங்கினாலே காற்று மாசு அதிகரித்துவிடுகிறது. ஆண்டுதோறும் இங்கு காற்று மாசுவினால் ஏற்படும்
சுவாசப் பிரச்சனைகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதும், மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்வதும் வழக்கமாக மாறிவிட்டது.
காற்று மாசுவின் தாக்கம்
தில்லியில் மக்கள், அக்டோபர் மாதம் பிறந்ததும் அச்சம் கொள்கின்றனர். ஜனவரி மாதம் வரை இந்தப் பிரச்சனை நீடிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தில்லியின் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட
மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
காற்று தரக் குறியீடு
காற்று மாசுவை அளவிட காற்று தரக்குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது
l 0-50: சிறந்த நிலை
l 51-100: திருப்திகரமானது
l 101-200: மிதமான மாசு
l 201-300: அதிக மாசு
l 301-400: மிக அதிக மாசு
l 401-500: மிகவும் மோசமான மாசு
தற்போதைய நிலை
தில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மோசமாக உள்ளது:
l ஐடிஓ பகுதி: 226 / l இந்தியா கேட்: 251 / l எய்ம்ஸ் பகுதி: 253
மக்களின் இன்றைய நிலை
காற்று மாசுவால் மக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்:
l தொண்டை அடைப்பு/ l மூச்சுத் திணறல் /
l கண் எரிச்சல்
தீர்வுக்கான முயற்சிகள்
* பட்டாசுகளுக்கு முழுமையான தடை
*கட்டுமானப் பணிகளுக்குக் கட்டுப்பாடுகள்
*13 மாசு கட்டுப்பாட்டு கருவிகளின் பயன்பாடு
* நெல் உமி எரிப்பதைத் தடுக்க நடவடிக்கைகள்
நீதிமன்றத்தின் தலையீடு
l உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது:
l பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளுக்கு கண்டனம்
l மாநில தலைமைச் செயலர்களை நேரில் ஆஜராக உத்தரவு
l அதிகாலை நடைப்பயிற்சியை தவிர்க்க அறிவுறுத்தல்
தலைநகர் தில்லியின் காற்று மாசு பிரச்சனையை தீர்க்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அரசின் நடவடிக்கைகள் மட்டுமின்றி, மக்களின் ஒத்துழைப்பும் இதற்கு மிகவும் அவசியம். இப்போதாவது நிலைமையை புரிந்துகொண்டு, அரசுகள் தீவிர நடவடிக்கை எடுப்பது நல்லது.
- ஐ.வி. நாகராஜன்