கடலூர்,மார்ச் 7- அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டி லுள்ள கடைகளின் வாடகையை குறைக்க முதல்வருக்கு விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடை பெற்றது. இதில் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா கலந்துகொண்டார். பிறகு, செய்தி யாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற மே 5 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள வணிகர் தின மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் கொரோனா பரவல் காரணமாக கடுமையாக நலிவடைந்த நிலையில் இந்த மாநாடு தீர்வு காணும் வகை யில் அமையும். மேலும் அந்த மாநாட்டு மேடையில் முதல மைச்சர் வணிகர்களின் பல்வேறு பாதிப்புக ளுக்கு தீர்வுகள் அறிவிப்பார் என லட்சக்கணக் கான வணிகர்கள் நெஞ்சில் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். ஆங்கிலேயர்கள் ஆண்ட பிறகு தற்போது வரை கடலூர் மாவட்டம் எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது. அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள கடை களுக்கு வாடகை கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஒழுங்கு நடவ டிக்கை குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழுவில் வணிகர் சங்க நிர்வாகிகளை இணைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை உள்ள கடைகளுக்கு சீரான வாடகையை நிர்ண யம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.