மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே 119 இந்தியர்களை நாடு கடத்திய டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே, அங்குள்ள இந்தியர்கள் 119 பேரை, டிரம்ப் அரசாங்கம் நாடு கடத்தி யுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பதவியேற்பதற்கு முன்னதாகவே உரிய ஆவ ணங்களின்றி அமெரிக்காவில் தங்கி யிருப்போரை நாடு கடத்துவேன் என்று அறிவித்தார். அதன்படி, ஜனாதிபதியான உடனேயே ஜனவரி 24 அன்று, சிலரை கைவிலங்கு பூட்டி, ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பத் துவங்கினார். வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செய லாளர் கரோலின் லீவிட் ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்திருந்த இதுதொடர் பான புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 3-ஆம் தேதி இந்தியர்கள் 104 பேரை யும், கை, கால்களை சங்கிலியால் பிணைத்து, ராணுவ விமானத்தில் ஏற்றி நாடு கடத்தினார். சுமார் 40 மணிநேரம், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையிலேயே, கைதிகளை போன்று மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட இந்தியர்கள், பிப்ரவரி 5 அன்று அமிர்தசரஸ் வந்திறங்கினர். இது வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமாக பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
மறுபுறத்தில், இவ்வாறு அனுப்பப் பட்டு இருப்பவர்கள் முதற்கட்டம் தான், மேலும் 12 ஆயிரம் இந்தி யர்கள் வரை படிப்படியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தது கொந்த ளிப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 13 அன்று அமெரிக்கா செல்லும் நிலையில், அவர் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு, அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் இருக்கும் போதே- டிரம்புடன், இரண்டு விமானங்களில் மேலும் 119 இந்தியர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தியுள்ளது. இதில், ஒரு விமானம் சனிக்கிழமை யும் மற்றொரு விமானம் ஞாயிற்றுக் கிழமையும் அமிர்தசரஸ் விமான நிலை யம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவை பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் நரேந்திர மோடி, பல ஆயிரம் கோடி மதிப்பில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்கும், இந்திய பெருமுதலாளிகளின் நலனுக்கான வர்த்தக ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளார்.
முழுமையாக அடிபணிந்த மோடி
இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு “இந்தியா - அமெரிக்காவை பொறுத்த வரையில், நாங்கள் எப்போதும் ஒரே கருத்தில்தான் இருக்கிறோம். அதாவது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருப்பதாக கண்டறியப்படும் எந்த இந்தியரையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்” என்றும் பிரதமர் மோடி, முழுமையாக டிரம்ப் அர சாங்கத்திடம் அடிபணிந்துள்ளார்.
அதாவது, அமெரிக்கா என்ன நாடு கடத்துவது, நாங்களே அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறியுள்ளார். நாடு கடத்தப்படும் தங்கள் நாட்டி னரை அழைத்து வர, இடதுசாரிகள் தலைமையிலான வெனிசுலா அரசு, விமானங்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. ஆனால், ‘இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்’ என்று பேசிய மோடி இந்தியர்களை அழைத்துவர எந்த விமானத்தையும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்ப வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் சந்திப்பில் விழி பிதுங்கிய மோடி
முன்னதாக, கடந்த 10 ஆண்டு களாக முறையாக செய்தியாளர் சந்திப்பையோ கேள்விகளையே எதிர்கொள்ளாத மோடி, அமெரிக்கா வில் டிரம்ப் உடன் கூட்டு செய்தியா ளர் சந்திப்பை நடத்தினார். இதில் மோடிக்கு மட்டும் பதில் சொல்வ தற்கு வசதியாக அவருக்கு எதிர்புறம் இரண்டு டெலிபிராம்ப்டர் வைக்கப் பட்டது.
அந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர், “ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதானி குறித்து டிரம்ப் உடனான சந்திப்பில் பேசினீர்களா என கேள்வி யை எழுப்பினர். இந்த கேள்வியை எதிர்ப்பார்த்திடாத மோடி முதலில் விழி பிதுங்கித் திணறினார். பிறகு அதானியும் ஒரு இந்தியர்; ஒவ்வொரு இந்தியரும் எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம். இருநாடுகளுக்கு இடையிலான உரையாடலில் தனிநபர் விஷயங்களை நாங்கள் பேசவில்லை” என சமாளித்துள்ளார்.