ஓ.பி.எஸ். விளக்கம்
தேனி - மதுரை சாலை யில் உள்ள ராஜாகளம் எனும் இடத்தில் 40 சென்ட் பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாங்கிய தாக குற்றச்சாட்டு எழுந்தது. இத னடிப்படையில் மாநில பட்டிய லின மற்றும் பழங்குடியினர் ஆணையம், சம்பந்தப்பட்ட நிலப் பட்டாவை ரத்துசெய்ய உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. நாளிதழ்களி லும் செய்தி வெளியானது. இந்நிலையில், பெரிய குளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ. பன்னீர்செல்வம் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இந்த விஷயம் தெரியாமல் பஞ்சமி நிலத்தை நான் வாங்கி விட்டதாக சில கட்சித் தலைவர்கள் எனக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது முழுக்க முழுக்க தவறான தகவலாகும்” என்று தெரி வித்தார். “நான் வாங்கியது, நில உச்ச வரம்புசட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட இடம். பல்வேறு சாதியினருக்கு அடுத்தடுத்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலம். பஞ்சமி நிலம் அல்ல. இது குறித்து மாநில பட்டியலின மற் றும் பழங்குடி யினர் ஆணை யத்திடம் இருந்து எனக்கு உத்தரவு வந்தது போலவும், பட்டாவை ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டது போல வும் வந்த தகவல்கள் அனைத்து தவறானதாகும்” எனக் கூறி யுள்ள ஓ. பன்னீர்செல்வம், “நான் வாங்கிய இடத்தின் சர்வே எண் 336/3 ஆகும். ஒரு ஏக்கர் 48 சென்ட் உள்ள இந்த இடம். நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையப்படுத்தப்பட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்க ப்பட்டதாகும். பின்பு இந்த நிலம் பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2473/963-ன் படி ஜெய லட்சுமி என்பவருக்குச் சொந்த மாக இருந்தது. தொடர்ந்து அவரது மகன் ராஜகோபால் என்பவருக்கு 1970-இல் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த நிலம் 1984 -இல் முத்துச்சாமி, மூக்க னுக்கும், 2008-இல் ஹரிசங்க ருக்கும் கைமாறியது. ஹரிசங்க ரிடம் இருந்து இந்த இடத்தை 2022-இல் வாங்கினேன். பின்பு 2024-இல் சுப்புராஜ் என்பவருக்கு விற்று விட்டேன்” என்றும் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.