பாபர் மசூதி விவகாரத்தில் அளித்த வாக்குறுதி என்ன ஆனது?
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம்
ஹூப்ளி ஈத்கா மைதானத்தைப் போலவே, பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண் டாட கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வக்பு வாரியம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. புதிய அமர்வில் நீதி பதிகள் இந்திரா பானர்ஜி, ஏ.எஸ் ஓகா மற்றும் எம்.எம். சுந்தரேஷ் இந்த வழக்கை விசாரித்தனர். வக்பு வாரியம் சார்பில் மூத்த வழக்கறி ஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். பெங் களூரு ஈத்கா மைதானம் பல பத்தாண்டு களாக முஸ்லிம்களின் பயன்பாட்டில் உள் ளது என்று கபில் சிபல் கூறினார். “மத சிறு பான்மையினரின் உரிமைகளை நசுக்க முடி யும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற் படுத்த வேண்டாம்” என்று மற்றொரு மூத்த வழக்கறிஞரான துஷ்யந்த் தவே வலியுறுத் தினார். “பெங்களூரு ஈத்கா மைதானத்தில் வேறு மதத்தினரின் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டப்படி வக்பு சொத்தாகவும் கூட அது அறிவிக்கப்பட்டுள் ளது. இப்படி இருக்கும் போது, திடீரென அந்த இடத்தில் பிரச்சனையைக் கிளப்பி, விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த விரும்புகிறார்கள்” என்றும் துஷ்யந்த் தவே தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அவர்கள், “பெங்களூரு ஈத்கா மைதா னம், அரசால் நிர்வகிக்கப்படும் இடம். அந்த வகையில்,விநாயகர் சதுர்த்தியையொட்டி இரண்டு நாட்களுக்கு மட்டுமே ஈத்கா மைதானத்தை பயன்படுத்திக் கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. அங்கு நிரந்தரக் கட்டமைப்பு எதுவும் கட்டப்படாது” என்று தெரிவித்தனர். அப்போது இடைமறித்த துஷ்யந்த் தவே, “உத்தரப்பிரதேசத்தில் பாபர் மசூதி விவகாரத்தில் அம்மாநில முதல்வரும் இப் படி உறுதி அளித்து இருந்தார். ஆனால் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரி யும்” என்று பதிலடி கொடுத்தார். இதையடுத்து, ‘பெங்களூரு ஈத்கா மைதானத்தில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், 2.5 ஏக்கர் பெங்களூரு ஈத்கா மைதானத்தின் உரிமை குறித்து இரு தரப்பினரும் கர்நாடக உயர்நீதி மன்றத்தை அணுகி தீர்வு காணலாம். அது வரை முந்தைய நிலையே தொடரும். இதை இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டும்’ என்று தீர்ப்பளித்தனர். இதையொட்டி, பெங்களூரு ஈத்கா மைதானத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கர்நாடக அதிரடிப்படை, அதி விரைவுப்படை போலீ சாரும் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் சாம்ராஜ்பேட்டையில் கொடி அணிவகுப் பும் நடத்தினர்.
ஹூப்ளி, ஆக.31- கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பு தங்க ளுக்கு சாதகமாக வந்ததால், சங்-பரிவா ரங்கள், திட்டமிட்டபடி ஹூப்ளி ஈத்கா மைதா னத்தில் விநாயகர் சிலையை நிறுவி சதுர்த்தி கொண்டாடினர். கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் ஹூப்ளி டவுன் கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள் அருகே ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நடத்து வதற்கு சங்-பரிவார் அமைப்புகள் முயன்ற நிலையில், ஈத்கா மைதானம் தங்களுக்குரி யது என்று இஸ்லாமிய அமைப்புகள் போராட் டம் நடத்தின. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன. மனுவை விசாரித்த கர்நாடக நீதிமன்றம், ஹூப்ளி ஈத்கா மைதா னத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்தது. அன்று முதல் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட வில்லை. இந்நிலையில், நடப்பாண்டு ஈத்கா மைதா னத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளிக்குமாறு இந்துத்துவா அமைப்பு கள், தார்வார் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். தார்வார் மாநகராட்சியும் வேகவேகமாக கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஹூப்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனு மதியளித்தது.
ஹூப்ளி ஈக்தா மைதானம் தங்களுக்கு சொந்தமானது எனவும் இந்த மைதானத்தில் இந்து மத கடவுள் விநாயகர் சதுர்த்தி விழா வை கொண்டாட அனுமதிக்கக்கூடாது எனவும் ‘அஞ்சுமென் இ இஸ்லாம்’ என்ற இஸ்லாமிய அமைப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு செவ்வாயன்று இரவு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக் காக எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசா ரணை இரவு வரை நீடித்தது. அப்போது, ஹூப்ளி ஈத்கா மைதானம் தங்களுக்கு சொந்த மானது என கூறிய ‘அஞ்சுமென் இ இஸ்லாம்’ அமைப்பு அந்த மைதானத்தில் இஸ்லாமிய மத வழிபாடு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் மாற்று மத வழிபாடுகள் நடத்தக்கூடாது என்றும் மேல் முறையீடு செய்தது. முன்னதாக சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதா னத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடு வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை யும் ‘அஞ்சுமென் இ இஸ்லாம்’ அமைப்பு சுட்டிக் காட்டியது.
ஆனால், இந்த மேல் முறையீட்டு மனு வை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹூப்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடையில்லை என்று தீர்ப்பளித்தது. சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதான விவ காரத்தையும், ஹூப்ளி ஈத்கா மைதான விவகா ரத்தையும், வேறுபடுத்திய கர்நாடக உயர் நீதி மன்றம், சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் யாருக்கு சொந்தமானது என்பதில் மாநக ராட்சிக்கும் வக்பு வாரியத்திற்கும் இடையே வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், ஹூப்ளி ஈத்கா மைதானம் அரசுக்கு சொந்தமானது என்பதில் எந்த பிரச்ச னையும் இல்லை. இந்த நிலத்தை ‘அஞ்சுமென் இ இஸ்லாம்’ அமைப்பு மாநகராட்சியிடமி ருந்து இஸ்லாமிய மத பண்டிகைகளான பக்ரீத் மற்றும் ரம்ஜான் ஆகிய நாட்களில் மத வழிபாடு நடத்த ஆண்டுக்கு 1 ரூபாய் என்ற மதிப்பில் 999 ஆண்டுக்கு குத்தகைக்கு மட்டுமே எடுத் துள்ளது. இதனால், அரசுக்கு சொந்தமான ஹூப்ளி ஈக்தா மைதானத்தை ‘அஞ்சுமென் இ இஸ்லாம்’ அமைப்பு உரிமை கொண்டாட முடியாது என்றும் நீதிபதி அசோக் எஸ்.கினாகி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதையடுத்து, ஹூப்ளி ஈத்கா மைதா னத்தில் சங்-பரிவாரங்கள், விநாயகர் சிலை யை நிறுவி, விநாயகர் சதுர்த்தி கொண்டா டினர்.