tamilnadu

img

போட்டித் தேர்வு : 2025இல் என்ன காத்திருக்கிறது? -

மைய வளாகம் பரபரப்பாக இருந்தது. டி.என்.பி.எஸ்.சி. கால அட்டவணை வந்துவிட்டது என்பதால்தான் இருக்கும் என்று ஊகித்தவாறே உள்ளே நுழைந்த தேர்வர், சில நண்பர்களைப் பார்த்து கையசைத்தார்.
கால அட்டவணைக்கு இவ்வளவு பரபரப்பா..?
இல்லை நண்பா.. இப்போ ஒரு ஆய்வே பண்ணிருவாங்க.. ஒவ்வொண்ணுக்கும் எவ்வளவு இடைவெளி.. எப்படி இருந்திருக்கலாம்... அப்படினு விவாதம் நடக்கும்..
ஒவ்வொரு தேர்வச் சொல்றீங்களா..?
பொதுவா, மையங்கள்ல படிக்குறவங்க எல்லாம் இந்த டெக்னிகல் தேர்வு பத்தி ரொம்பப் பேச மாட்டாங்க... குரூப் 1, 2 அப்புறமா 4... இதெல்லாம்தான் விவாதத்துல இருக்கும்..
அதுல என்ன இடைவெளி தேவைப்படுது..
முன்னாடிலாம் இப்புடி இல்ல... இப்போ இந்தத் தேர்வுகள் கொஞ்சம் சிக்கலானதா மாறியிருக்கு..  குரூப் 1 தேர்வுல மொழிப்பிரச்சனை இல்ல... தமிழ், ஆங்கிலம்னு இரண்டுலயும் தேர்வு எழுதலாம்..  குரூப் 2ல தமிழ் இருக்கும்... ஆங்கிலமும் தேர்வு பண்ணிக்கலாம்... ஆனா, குரூப் 4ல, தமிழ் மட்டும்தான் இருக்கும்... ஆங்கிலம் இருக்காது..
ஆனா, எல்லாத் தேர்வுக்கும் தமிழ்ல தகுதித்தேர்வு இருக்குதே...
அது இருக்கத்தான் செய்யுது.. ஆனா ஒவ்வொண்ணுக்கும் தேர்வு முறை மாறுதே..? 
மாறுனா என்ன..? பாடத்திட்டத்தப் புரிஞ்சுக்கிட்டா போதுமே.. நாம எல்லாம் எந்தப் புத்தகத்தப் படிக்குறதுன்னு தலைமுடியப் பிச்சுக்கிட்டு இருக்குறது வழக்கம்.. பழசு.. புதுசு... பழைய சமச்சீர்... புது சமச்சீர்னு எல்லாத்தையும் போட்டுக் குழப்பிடறோம்.. சிம்பிளாச் சொன்னா, தேர்வுக்கான பாடத்திட்டத்தப் படிக்கனும்... அதெல்லாம் எந்தப் புத்தகத்துல இருக்கோ அதக் கைல எடுக்கனும்.. அவ்வளவுதான்.. 
தம்பி... வந்து சேர்ந்த கொஞ்ச நாள்லயே இவ்வளவு தெளிவா ஆயிட்டீங்க... நம்ம சீனியர் உங்களத் தனியாக் கவனிக்குறதுனாலயா..?
உண்மைதான்...வகுப்புக்கு வெளிலதான் நிறையக் கத்துக்க முடியுது.. அது மட்டுமில்ல... நான் இங்க வர்றதுக்கு முன்னாடி, சொந்தமாப் படிச்சுப் பாஸ் பண்ணிரலாம்னு இருந்தேன்.. சில பேரு அதையும் சொன்னாங்க.. ஆனா, இங்க வந்தபிறகுதான் இப்படி நாமல்லாம் நின்னு விவாதிப்போம்னு தெரிஞ்சுது.. வீட்டுல சொந்தமாப் படிச்சா இந்த வாய்ப்பெல்லாம் இருக்காதே..
அது சரிதான்... லைப்ரரி மாதிரி இடங்கள்ல சொந்தமாப் படிக்குறவங்க இருக்காங்களே..
ஆனா, பெரும்பாலும் அவங்கள்ல பலரும் ஏதாவது மையத்துல சேர்ந்து வகுப்புல கலந்துக்கிட்டவங்களா இருக்கும்..
குறுக்கே புகுந்த பெண் தேர்வர் ஒருவர், இல்லேனா ஸ்கூல்ல நடந்த வகுப்புகள்ல ஒழுங்கா கலந்துகிட்டவங்களா இருக்கும்.. நமக்குள்ள பிரச்சனையே,  அங்க படிச்சத மறந்துபோனதுதான.. நான் எல்லாம் பத்தாம் வகுப்புல 500க்கு 480 வாங்குனேன்.. ஆனா அப்போ படிச்சத அடுத்த வருஷமே மறந்துட்டேன்.. என்னோட படிச்ச இன்னொரு பொண்ணு பத்தாம் வகுப்புல 400தான் வாங்கிருந்தா.. ஆனா போன வருஷமே பள்ளிக் கல்வித்துறைல சேந்துட்டா..

அவரு பேரு என்ன..?
நல்லாருக்கே.. வேற என்ன சொன்னார்?

சாதாரணமா புதுசா சந்திக்குறவங்க கிட்ட பேசுறதுக்கான உத்திய அவரு சொல்லிக் கொடுத்தாரு.. நடுவுல, ஏதாவது கேள்வி கேட்டா, அவரோட பேரச் சேத்து சேத்துச் சொல்லனும்... கிளம்புறப்பயும் நன்றி என்பதில் அவருடைய பேரயும் சொல்லிக் கிளம்பனும்.. அப்போ மறப்பதற்கான வாய்ப்புகள் குறைவுன்னு சொன்னாரு..
இத நாம கடைப்பிடிக்கலாமே.. 
அதே மாதிரி உத்திகள் வகுப்புலயும் நல்ல விஷயங்கள் கிடைச்சுதே.. உண்மைலயே அது எடுத்தவரோட பேரு மறந்துருச்சு..
ஆமா... அவரு காட்சிப்படுத்துதல், படிக்கட்டு முறைலாம் சொல்லிக் கொடுத்தாரே..
நானும், சீனியரும் இந்தக் காட்சிப்படுத்துதல பத்திதான் ரெண்டு நாளாப் பேசிட்டு இருக்கோம்.. நேத்து கிரிக்கெட் பாக்குறப்ப, சஞ்சு சாம்சன செஞ்சுரி அடிக்குறப்ப பவுண்டிரிக்கு மேலே பந்து பறந்துகிட்டே இருந்துச்சு... எவ்வளவு எடுக்குறாருன்னுலாம் நான் பாக்கல. அந்தப் பந்து போகுறப்ப எல்லாம் அது வளைவுப்பாதை இயக்கம்னு சொல்லிப் பாத்துக்கிட்டேன்.. 
அடடே, இன்னிக்கு கேட்ச் பிடிக்குறப்ப, கையைக் கொஞ்சம் பின்னுக்குக் கொண்டு போவாங்கள்ல.. அது திசைவேகத்தக் காட்டுதுன்னு சொல்லிப் பாத்துக்கனும்.. 
இந்தத் தொடர் முடியுறப்ப யாரெல்லாம் பேட்டிங்கல, பந்து வீச்சுல எவ்வளவு சராசரினு போடுவாங்க.. நான் கணக்குல கொஞ்சம் வீக்... கிரிக்கெட் புள்ளிவிபரம்னா ஆர்வமாப் போட முடியுது.. 
பரவாயில்லையே... ஆனா, மூணு தேர்வுக்கும் ஒரே மாதிரிப் படிக்க முடியும்..?
ஆழமா உழனும்... அவ்வளவுதான்... குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம்தான் அப்புடியே குரூப்2 தேர்வுக்கும்.. இந்த ரெண்ட விடக் கொஞ்சம் குறைவாத்தான் குரூப் 4க்கு இருக்கு.. நல்லா ஆழமாப் படிச்சோம்னா, மூணுலயும் நல்லா எழுதிடலாம்..
அங்க பாருங்க.. சீனியர் வந்துட்டாரு..
சீனியர்... இப்பல்லாம் கரெக்டா, நாங்க பேசி முடிக்குறப்ப வர்றீங்க.. வாங்க, நாங்க என்ன பேசுனோம் தெரியுமா.. என்றபடியே அழைத்துச் சென்றார்.

மேலே எறிஞ்சோமே...?!!

ஆமா... நாமதான் பத்தாம் வகுப்புக் கடைசித் தேர்வு அன்னிக்கு வெளில வந்தவுடன, கைல இருந்த நோட்டு, புத்தகம் எல்லாம் மேலே தூக்கி எறிஞ்சோமே..
வெறும் புத்தகங்கள மட்டுமா எறிஞ்சோம்.. நாம படிச்சதெல்லாத்தையும் சேத்துதான எறிஞ்சோம்.. அதான் எதுவுமே நினைவுக்கு வரமாட்டேங்குது.. அஞ்சு வருஷம் கழிச்சு இத வெச்சுதான் அரசு வேலை குடுப்பாங்கன்னு தெரியாம போச்சே..
இதுல நாம படிச்சப்ப இருந்த பாடத்திட்டம் வேற... இப்போ இருக்குறது வேற..  மறுபடியும் புதுசாப் படிக்குற மாதிரி இருக்கு..
நிறைய அடிப்படையா இருந்ததெல்லாம் அப்படியேதான் இருக்கு.. 
இதுல வினாத்தாள் எப்புடியிருக்கும்குறது முக்கியமா இருக்கு... நாம குரூப் 2 எழுதுனோம்ல... பொது அறிவுப்பகுதி ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. 
கஷ்டமா இருந்துச்சுனு சொல்றதவிட ரொம்ப அடிப்படையாக் கேட்டுட்டாங்க... எதிர்பாராத வினாக்கள்..
இதில் தனக்கு கருத்து இருக்கிறது என்பதால் உள்ளே புகுந்த தேர்வர், நான் ரெண்டு மாசம்தான் தயாராயிருந்தேன்... நம்ம சீனியர் சொன்னதுல இருந்து 25 வினாக்கள் வந்துருந்துதுனாப் பாத்துக்கோங்க..  அவரும் எதிர்பார்க்கல...நான் லேட்டா வந்ததுனால, அடிப்படையான விஷயங்களைக் கத்துக்கச் சொன்னார்.. அதத்தான் தேர்வுல கேட்டாங்க.. 
நாங்க பண்னுன தப்பே அதுதான்... இதெல்லாம் கேக்க மாட்டாங்கன்னு விட்டுட்டுப் போயிட்டோம்..  சில சமயம் கதை கேப்போம்... அது யாரோட கதைனு பாக்காம விட்டுருவோம்.. வினா அதுவாக இருக்கும்..
நாலு மாசம் முன்னாடி நடந்த சிறப்பு வகுப்புல ஒருத்தர் இதப்பத்தி சொன்னாரு... அதாவது ஒருத்தர் ஏதாவது சொல்லிருப்பாரு... அந்த விஷயம் நல்லா மண்டைல 
ஏறிருக்கும்... கொஞ்ச நாள்ல சொன்னவரு பேரு மறந்துருவோம்.. அந்த விஷயத்த யாருகிட்டயாவது பகிர்ந்துக்குறப்ப சொன்னவரு பேரயும் சேத்துச் சொல்லுங்கன்னு சொன்னார்..

குரூப் தேர்வுத் தேதிகள்
தேர்வு           அறிவிக்கை நாள்    தேர்வுத்தேதி
குரூப் 1        01.04.2025        15.06.2025
குரூப் 4 & விஏஓ    25.04.2025        13.07.2025
குரூப் 2 & 2ஏ    15.07.2025        28.09.2025