tamilnadu

img

மீண்டும் சிவக்கும் முர்ஷிதாபாத்

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள  ராணிநகர் வளமானது. நெல்லும் சணலும் விளையும் வயல்கள். வயல்களில் எங்கு பார்த்தாலும் பலா, மா, வாழை, முருங்கை. இது அர சியல் ரீதியாக செயல்படும் பகுதியும் கூட. கிராமங்க ளில் வீட்டுச் சுவர்களில் தேர்தல் சின்னங்கள். பெரும்  பாலும் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம். முர்ஷிதாபாத்தில் இடது முன்னணி வேட்பாள ராக சிபிஎம் மாநில செயலாளரும், அரசியல் தலை மைக்குழு உறுப்பினருமான முகமது சலீம் போட்டி யிடுகிறார். அதிகாலையிலேயே கிராமங்களில் பிரச்  சாரத்தை துவக்கி வருகிறார். மக்தபாடா கிராமத்தில்,  பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் சலீமை வரவேற்க குவிந்திருந்தனர். மாலை அணிவிப்புக்குப் பிறகு சில வார்த்தைகளில் நன்றி  தெரிவித்த சலீம், அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று வயதான தாய்மார்களிடம் நலம் விசா ரிக்கிறார். அவரது வருகையை பின் தொடர்ந்து இரு சக்  கர வாகனங்கள் மற்றும் மின்சார ஆட்டோக்கள் அணிவகுத்தன. கிராமப்புற சாலைகளின் இருபுற மும் கைகளை அசைத்து மலர் மழை பொழிந்து மக்கள் வாழ்த்தினர். தீர்மானிக்கப்பட்ட வரவேற்பு மையங்களைத் தவிர, பிற பகுதிகளுக்கும் சலீம் தனது  இருசக்கர வாகனத்தை ஓட்டினார். கிராம மக்கள் அவரை வரவேற்றனர். மக்களவை மற்றும் மாநிலங்க ளவை உறுப்பினராக ஜொலித்த சலீம், முன்னாள் மாநில அமைச்சருமாவார். அனைவருக்கும் தெரிந்த வர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவராக இருந்து சலீம் நடத்திய போராட்டங்களை நாடறி யும். கிராமங்களைக் கடந்து நகரத்தை வந்தடைந்த போது, சுற்றுப்பயணம் ஒரு பெரிய ஊர்வலமாக மாறி யது. இசைக்கருவிகள் துணையாக உள்ளன. ஆதர வாளர்கள் சைக்கிள்களிலும், கால் நடையாகவும் அவ ருடன் பயணம் செய்தனர். வழிநெடுகிலும் வரவேற்பு  பெற வேண்டியிருந்ததால், திட்டமிடப்பட்டதை விட  தாமதமாக சுற்றுப்பயணம் சென்றடைந்தாலும் மக்கள்  காத்திருந்தனர். சலீம் தனது உரைகளில் பாஜக மற்  றும் திரிணாமுல் கட்சிகளை அம்பலப்படுத்தினார். வங்காளத்தில் இருந்து செங்கொடியை துடைத்தெ றிய வேண்டும் என்று கூறியவர்கள் ஊழலில் சிக்கித்  தவிப்பதை அவர் சுட்டிக்காட்டினார். சிறு குறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ள முர்ஷிதாபாத் தொகுதி யில் 2014இல் மார்க்சிஸ்ட் கட்சியின் பதரு தோச கான்  வெற்றி பெற்றார். கடந்த முறை திரிணாமுல் கட்சி யின் அபு தாஹிர் கான் வெற்றி பெற்றார். இந்த முறை யும் அபுதாஹிர் கான் வேட்பாளராக உள்ளார். பாஜக  வேட்பாளர் கவுரி சங்கர் கோஷ். இடது முன்னணி  வேட்பாளரான முகமது சலீமை காங்கிரசும் ஆதரிக்கி றது. முர்ஷிதாபாத் 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்  காளர்களைக் கொண்ட தொகுதியாகும். தேசிய இயக்  கத்தில் மறக்க முடியாத பங்காற்றிய முர்ஷிதாபாத், மதச்சார்பின்மையையும் போராட்டக் குணத்தையும் காக்க தயாராகி வருகிறது. - முர்ஷிதாபாத்தில் இருந்து சாஜன் எவ்ஜின்