மம்தா அரசுக்கு கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
திருவாரூர், ஆக. 19 - பெரும்பான்மை இல்லாத நிலை யிலும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’, ‘பொது சிவில் சட்டம்’ என்று பேசி, ஒன்றிய பாஜக அரசு தனது பிளவு வாத அரசியலை செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திருவாரூரில் திங்களன்று கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதி லளித்து அவர் கூறியதாவது: மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்! மேற்குவங்கத்தில் முதல் நிலை பயிற்சி மருத்துவர், வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூ ரமாக கொலை செய்யப்பட்டுள் ளார். இதில் பல்வேறு மர்மங்கள் இருந்தாலும் மேற்குவங்க அரசு ஒருவரை மட்டும் கைது செய்துள் ளது. நாடு முழுவதும் இச்செயலுக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் தொட ர்ந்து போராட்டம் நடத்தி வருகின்ற னர். எனவே, உண்மைக் குற்றவாளி களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மேலும் இப்படி ஒரு சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாத வண்ணம் அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ. 10 ஆயிரம் கோடி மக்களிடம் கொள்ளை
மக்களை ஏமாற்றுகின்றனர். இதுபோன்ற நிதி நிறுவனங்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி நிறு வனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்து, முத லீடு செய்தவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டும். தமிழகத்தை புறக்கணிப்பதை பாஜக மாற்றிக் கொள்ளாது ஆளுநர் அளித்த விருந்தில் பங்கேற்றது தமிழக அரசின் நிலைப்பாடு. ஒன்றிய - மாநில அரசுகள் இடையேயான உறவு என்ற அடிப்படை யில் முரண்பாட்டை அதிகம் வளர்க்க வேண்டாம் என தேநீர் விருந்தில் பங்கேற்றிருக்கலாம். ஆனால், பாஜக அதன் குணத்தை மாற்றிக் கொள்ளாது. தமிழகத்தைப் புறந்தள்ளும் ஒன்றிய அரசின் மனநிலையில் எவ்வித மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. அதிமுக செல்வாக்கு குறைந்து விட்டது அதிமுக ஆட்சியில் இருந்தபோது, செய்த தவறுகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அதிமுக ஆட்சியில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய அகவிலைப்படி, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை வழங்காமல் இருந்துள்ளது; அது தற்போது பெரும் பிரச்சனையாக மாறி யுள்ளது. அதிமுகவில் தனித்தனியாக இருப்ப வர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு குறைவு. அதிமுகவின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. அதிகாரிகளின் குளறுபடிகளால் டெல்டா விவசாயிகள் பாதிப்பு கர்நாடகத்தில் பெய்த அதிக மழை பொழி வினால் மேட்டூர் அணை நிறைந்தது. டெல்டா பகுதிக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும், கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என டெல்டா விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அப்படியானால் நீர்வளத்துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது. சம்பா சாகுபடிக்கு என்ன மாதிரியான நடவடிக்கை களை எடுப்பது என விவசாயிகள் குழம்பியிருக் கின்றனர். இதே நிலை நீடித்தால், மக்கள் நலன் கருதி போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
மோசடி நிதி நிறுவனங்கள், மக்க ளுக்கு அதிகப் பணம் தருவதாகக் கூறி, ரூ. 10 ஆயிரம் கோடிக்கு மேல் மக்களின் பணத்தை கொள்ளை யடித்துள்ளனர். அரசு எந்த உத்தர வாதத்தின் பேரில் இவர்களுக்கு அனுமதி அளிக்கிறதென்று புரிய வில்லை. உழைக்கும் மக்களின் பணமே பெரும்பாலும் பறிபோகி றது. ஒன்றிய - மாநில அரசுகளின் வங்கிகளில் போதுமான அளவு வட்டி தரப்படாததாலேயே, மக்கள் இதுபோன்ற நிதி நிறுவனங்களை நாடுகின்றனர். எனவே, கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் சாதாரண மக்களின் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி வழங்க வேண்டும். நிதி நிறுவன மோசடிகளில் பாஜகவினருக்கு தொடர்பு ஆருத்ரா நிதி மோசடி உள்பட, மோசடி செய்பவர்கள் பெரும்பா லும் பாஜகவுடன் தொடர்பு உடை யவர்களாகவே இருக்கின்றனர். ஒன்றிய அரசுடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு
பிளவுவாத சதித்திட்டத்தை முறியடிப்போம்!
சுதந்திர தின விழாவில் பிரதமர், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என்று கூறியிருப்பதெல்லாம் ஏற்புடையதல்ல. இவைகளை நிறைவேற்ற சட்டத்தை திருத்த வேண்டும். ஆனால், அவர்களுக்கு மெஜாரிட்டி இல்லாததால் இவையெல்லாம் செய்ய முடியாத காரியங்களாகும். இருந்தும் மக்கள் மத்தியில் தங்களின் பிளவுவாத அரசியலை கொண்டு செல்வதற்காக, ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் என்று பேசி வருகிறார்கள். அந்த சதித் திட்டம் முறியடிக்கப்படும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பை தட்டிக் கழிக்கும் பாஜக!
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு முக்கியத்துவம் வந்து விடுமோ? என்ற அச்சம் காரணமாகவே அதைத் தட்டிக் கழிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. நாடு மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது. பாஜகவின் மோசமான பொருளாதாரக் கொள்கை, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபம், மதவெறி இவைகளை எதிர்க்கக்கூடிய வலுவான அணி இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.