tamilnadu

img

“செனகல்காரனின், அமானுஷ்யக் கனவு”

மேற்கு ஆப்பிரிக்க இளைஞர்கள் பெருந்திரளாக இத்தாலிக்கு வேலை தேடி,கள்ளத்தோணியில் புலம் பெயர்ந்து செல்கையில் கடல் சீற்றத்தில் மாட்டி,கொத்து கொத்தாக இறக்கின்றனர் என்பது தினசரிகளில் அடிக்கடி வரும் செய்தி. ஹோமரின் ஒடீசி காவிய கதாபாத்திரமான ஒடீஷியஸ், டிராய் போர் முடிந்து,தனது சொந்த ஊருக்கு,கடல் மார்க்கமாக பத்து வருட சாகசப் பயணத்தில் பல தடைகளை தாண்டிச் சென்றான் என்கிறது கிரேக்க காவியம்.  ஒடீஷியஸ் போல்,செனகல் நாட்டு16 வயது இளைஞன் சையது, தனது ஒளிமயமான வாழ்வுக்காக, இத்தாலிக்கு கடவுச்சீட்டின்றி செல்கிறான்.பாலைவனம் மற்றும் கடல் பயணத்தில் அவன் எதிர் கொண்ட துயர அரசியலை,மரித்த மனித விழுமியங்களை நவீன சினிமா மொழியில் பேசுகிறது

“Io Capitano”(Me Captain)என்ற இத்தாலியப் படம்.

“நம் நாட்டிலே படி.இங்கேயே வேலை பார்.ஐரோப்பா கனவெல்லாம் வேண்டாம். அங்கு செல்லும்  வழிநெடுகிலும் பிணங்கள் கிடக்கின்றன.அப்படி ஒரு சிந்தனை இருந்ததென்றால், அதனை மண்டை யிலிருந்து கழற்றி வீசு” என கண்கலங்கிய படியே சென கல் நாட்டுத் தாய் தனது மகன் சையதுவை கண்டிக்கி றாள். தாய் சொல்லை ஏற்பது போல் நடிக்கிறான்.ஆனால்  மண்டையில் ஐரோப்பாக் கனவு கனன்று கொண்டிருக்கி றது. மாபெரும் இசைக்கலைஞனாக இத்தாலியில் ஜொலிக்க வேண்டுமென்பதே சையது, அவனது பால்ய  நண்பனும் ஒன்றுவிட்ட சகோதரனுமான மூசா ஆகி யோரின் கட்டுக்கடங்கா வேட்கை.

தாயின் கண்டிப்பு, தங்கையின் பாசம், உணர்வோடு  கலந்த ஊர் பாசம் இத்தனையையும் தூக்கி எறிந்து  விட்டு, இத்தாலியை நோக்கி,கள்ள வழியில் நண்ப னோடு பயணிக்கிறான்.  வேதனையான அவர்களது பாலைவன நடைபய ணத்தில், ஆங்காங்கே பிணங்களைப் பார்க்கின்றனர். தாயின் கண்டிப்பு மிக்க வார்த்தைகள் ஞாபகத்திற்கு வருகிறது.  முதலில் நைகர் நாட்டு மாஃபியாக்களிடம் பணத்தை  பறிகொடுக்கிறார்கள். அத்துடன் அவர்கள் லிபிய  ஷேக்கிடம் சையதை விற்கிறார்கள். மூசா கைது  செய்யப்படுகிறான். இருவரும் பிரிய நேருகிறது. சையது, கொத்தடிமையாக சம்பாதித்த பணத்தை  கொண்டு ஐரோப்பக் கனவை மீண்டும் உயிர்ப்பிக்கி றான். இதற்கிடையில் நண்பனையும் கண்டறிகிறான். இருவரும், கள்ளமார்க்கமாக இத்தாலி செல்வ தற்கு, லிபிய மனிதக் கடத்தல் மஃபியாக்களை அணுகு கின்றனர்.

இவ்வாறு அணுகும் கூட்டத்தில் இளைஞன் ஒரு வனை கள்ளத் தோணியின் மாலுமியாக்கி, அனுபவ மற்ற கடல் பயணத்துக்கு தயார்படுத்துகின்றனர்.திற மையும், அதிர்ஷ்டமும் இருந்தால்,மாலுமி, தோணி யோடு இத்தாலி கடற்கரையை அடையலாம். இல்லை யேல் சகலரும் பிணங்களாக மிதக்கலாம்.இந்த  விஷச் பரிட்சையில் மாட்டிய சையதை, மாஃபியாக்கள்  மாலுமியாக ஆக்குகின்றனர். நினைத்துப் பார்க்க முடியாத துயர வலி களோடும்,நூற்றுக்கும் மேற்பட்ட குடிபெயரும் பய ணிகளோடும்,படகை இயக்கிய சையது,இத்தாலிக்குள் நுழைந்தானா?  பாலைவனத்தில் நடக்க தெம்பின்றி தவிக்கும் பெண்ணொருத்தி, பயணத்திலேயே குற்றுயிரும் கொலையுயிருமாக கீழே சாய்கிறாள். சையது முத லுதவி செய்தும், இறக்கிறாள். பிணத்தை எப்படி யாவது சுமந்து செல்ல முயற்சிக்கிறான். முடிய வில்லை. வேறு வழியின்றி மனதை கல்லாக்கி, அங்கேயே கிடத்திவிட்டு பயணத்தை தொடர்கிறான். அப்போது கனவு காண்கிறான். “இறந்தவள் உயிர் பெற்று பறக்கிறாள். அவளது கையை பற்றியபடி ஐரோப்ப பயணத்தை தொடர்வதாக கனவு நிறைவு பெறும்.” லிபிய மாஃபியாக்களிடம் சிக்கி சித்ரவதை அனு பவிக்கையில் தாயின் பேச்சை கேட்காததால் தான் இந்நரக வேதனையை அனுபவிப்பதாக சையது உணர்கிறான். அப்போது காணும் கனவில் “தாயை சந்தித்து மன்னிப்புக் கேட்க இறந்த மூதாதையரிடம் வழி கேட்டு மன்றாடுவான். அவரொரு ஆண் தேவதை யை வழித்துணைக்கு அனுப்புவார். தேவதை உயர பறந்து கொண்டே வழிகாட்ட, சையது அண்ணாந்து பார்த்துக்கொண்டே தாயை நோக்கி ஓடுவதாக கனவு  தொடரும்.” உயிர்ப்பற்ற ஒளிமயமான வாழ்வை எதிர்நோக்கி இருக்கின்ற கைக்கும் வாய்க்குமான மனித வாழ்வை தொலைக்கின்ற, ஆப்பிரிக்க மக்களின் மேற்கத்திய கனவை, இவ்விரு கனவுகள் மூலமாக, மேஜிக்கல் ரியலிச பாணியில் இயக்குநர் அழகுணர்வோடு வெளிப்  படுத்தியுள்ளார். 

சையது, ஒரு வழியாக இத்தாலியை நெருங்க, கடற்கரை ரோந்து ஹெலிகாப்டர் இவர்களது படகை  சுற்றி வளைக்கிறது.சையது, படகின் மையத்தில் பயணி கள் மத்தியில் நின்று கொண்டு, ஹெலிகாப்டரை நோக்கி, “நான் தான் இக்கப்பல் மாலுமி.அனைவரை யும் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன். யாரும் இறக்கவில்லை. பயணத்தில் ஒரு பெண்ணுக்கு சுகப்பிர சவம் நடந்து தாயும் சேயும் நலமாக உள்ளனர்.நான்  சாதித்து விட்டேன்... நான் தான் மாலுமி..”என சாகசக்  குரலில் கத்துவான்!? ஆனால் நேர்மறை, எதிர்மறை சமிக்ஞை எதுவும் கிடைக்காது. மகிழ்ச்சி, பரித விப்பாக மாறும். ஹெலிகாப்டர் சத்தம் காதை பிளக்கும்.  உவகைக் கண்ணீர் சோகக் கண்ணீராக மாறும். அருகாமைக் காட்சியாகும் ,கண்ணீர் தோய்ந்த, காயத்  தழும்புகள் நிறைந்த சையதின் முகம், மங்கலாக மாறி, திரை இருட்டாகும். மாலுமியாக சாதித்த சையதின் கனவு மெய்ப்படும் தருணத்தில்,அவன் ஒலிக்கும் உண்மையின் ஒலக் குரல், ஹெலிகாப்டரின் ராட்ஷச இரைச்சலில் கபளீகர மாகிறது. இனிய பாடலில் வசீகரித்து அடிமையாக்கும் அசுரப்  பெண்ணிடமிருந்து ஒடீஷியஸ், தன்னை படகின் மையக்கம்பில் கயிறால் இறுகக் கட்டியும்,வீரர்களின் காதுகளை மெழுகால் அடைத்தும் கானத்தை கேட்டும், கேட்காமலும் அனைவரும் அவளிடமிருந்து கடல் பய ணத்தில் தப்பித்ததாக வரும் ஹோமரின் காவியம் அக்கணம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒருவித மனப் படபடப்பை இறுதிக்காட்சி உரு வாக்க, ஒரு உன்னதமான படம் பார்த்த அனுப வத்தால் அது தணிகிறது. ஆப்பிரிக்க மண்ணிசையையே படம் நெடுகிலும் பின்னணி இசையாக்கி,மனதை கலங்கடிக்கும் துயர இசையை இழைய விட்டுள்ளார் இசையமைப்பாளர் ஆன்ட்ரீ ஃபாரி.  சையது பாத்திரமேற்ற சையதோ ஸார்ர், உயிர்ப்பான நடிப்பால் அனைவரையும் ஈர்த்துள்ளார்.பல உலக திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளார்.பிற துணை பாத்திரங்களும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். திரைக்கதை, படத்தொகுப்பு, ஓளிப்பதிவு,ஆடை அலங்காரம் மற்றும் அரங்க அமைப்பு அனைத்தும் சம  விகிதத்தில் படத்தின் வெற்றிக்கு சிறப்பாக பங்களித் துள்ளது. மேட்டியோ கரோன் என்ற இத்தாலியர் இப்படத்தை சிறப்பாக இயக்கியமைக்காக,2024க்கான சிறந்த இன்டர்நேஷனல் திரைப்பட பிரிவிற்கான ஆஸ்கர் விருதுக்கு இப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இப்படம் பிரைம் அமேசானில் உள்ளது.