மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1.07 கோடியில் நலத்திட்ட உதவிகள்
புதுக்கோட்டை, மே 14 - புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் புதன் கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 269 பய னாளிகளுக்கு ரூ.1.07 கோடி யில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், அண்டக் குளம் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலை மையில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில் 269 பயனாளிகளுக்கு ரூ.1,06,61,062 மதிப் பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவி களை ஆட்சியர் வழங்கினார்.