நாமக்கல், ஜூன் 27- நாமக்கல் மாவட்டத்தில் அரசு நகரப்பேருந்தில் முதன் முறையாக பெண் ஒருவர் நடத் துநராக நியமிக்கப்பட்டுள் ளார். நாமக்கல் பணிமனை 1, 2, ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் அரசுப் போக்குவரத்து கழக பணி மனைகள் உள்ளன. இந்த பணிமனைகள் முலம் 171 நகர, புறநகரப் பேருந்துகள் இயக் கப்பட்டு வருகின்றன. 600க்கும் மேற்பட்ட ஓட் டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் கள் உள்ளனர். அண்மையில் வாரிசு அடிப் படையில் 10 நபர்களுக்கு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இதர பணியிடங்களில் வேலைவாய்ப்பு வழங்கப் பட்டது. இதில், பணிக்காலத்தின்போது உயிரி ழந்த பயணச்சீட்டு பரிசோதகரான முனியப் பன் என்பவரது மகள் இளையராணிக்கு (34) நடத்துநர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாமக் கல் மாவட்டத்தில் முதன்முறையாக அரசு நகர விரைவுப்பேருந்தில் (ராசிபுரம் - சேலம்: பேருந்து எண் 52) பெண் ஒருவர் நடத்துநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இளைய ராணி கூறுகையில், “எந்த துறையானாலும் சாதிக்க வேண் டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெற லாம். தந்தை இறப்பால் வாரிசு வேலை கிடைத்தது. 10 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட் டதில், நான் மட்டும் தான் பெண் நடத்துநர். இப்பணிக்காக ஒரு மாதம் பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டதால் ஆர்வ முடன் பணியாற்றி வருகிறேன்” என்றார். இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக நாமக்கல் மண்டல மேலாளர் பாண்டியன் கூறுகையில், இதற்கு முன்பாக நாமக்கல் மாவட்டத்தில் அரசு பேருந்தில் பெண் நடத் துநர்கள் பணியாற்றினார்களா? என்பது சரிவர தெரியவில்லை. சேலம், தருமபுரி மாவட்டங் களில் சிலர் பணியாற்றுகின்றனர். தற்போது, ராசிபுரம் பணிமனையில் வாரிசு அடிப்படை யில் பெண் ஒருவருக்கு நடத்துநர் பணி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.