டெல்அவிவ், நவ. 12- இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைக்கும் ஆண்டாக 2025 இருக்கும் என்று இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச் அறிவித்துள்ளார். பகிரங்கமான இனஅழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு வெறியுடன் கூடிய இவரது பேச்சுக்கு பாலஸ்தீன ஆதரவலா அமைப்புகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன. திங்களன்று நடைபெற்ற இஸ்ரேல் நாடாளு மன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஸ்மோட்ரிச், மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும், அதற்காக தேவையான உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும், அதற்கான வேலையை துவங்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்மோட்ரிச்சின் இந்த இனவெறி அறி விப்பானது சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் லெபனான் மற்றும் காசா பகுதியில் இஸ்ரேலின் போர் நடவடிக்கை களுக்கு எதிராக நடைபெற்ற அரபு மற்றும் முஸ்லீம் நாடுகள் தலைவர்களின் கூட்டத் திற்குப் பிறகு வந்துள்ளது. இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான கூட்டணி ஆட்சியே நடைபெற்று வருகிறது. யூத இன வெறி கட்சியை சேர்ந்த தீவிரமான இன வெறி, முதலாளித்துவ, இனப் படுகொலை ஆதரவாளரான ஸ்மோட்ரிச்சின் அறிவிப்பை இஸ்ரேல் அரசு அதிகாரப் பூர்வ மாக அங்கீகரிக்கவில் லை. எனினும் இந்த அறிவிப்பானது இஸ் ரேல் அரசாங்கத்தின் எதிர்காலத்திட்டம் என்ன என்பதையும், போர் நிறுத்தம் மேற்கொண்டு அமைதியை நிலை நாட்ட அவர்கள் ஆர்வம்காட்டவில்லை என்பதையுமே காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு இதனிடையே சவூதியில் அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றிய இளவரசர் முகமது பின் சல்மான் காசாவில் “உடனடியாக போர் நிறுத்தம்” கொண்டுவரப்பட வேண்டும் “பாலஸ்தீனர்கள் மற்றும் லெபனான் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைகளை” நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார். பாலஸ் தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் பேசிய போது இஸ்ரேலை ஐ.நா. அவையில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஸ்மோட்ரிச்சின் இனவெறி அழைப்பிற்கு பிறகு பேசிய பாலஸ்தீன ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் நபில் அபு மேற்குக் கரையின் மீது இஸ்ரேலின் அதிகாரத்தை திணிப்பது குறித்து ஸ்மோட்ரிச் தெரிவித்த கருத்துக்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் மேற்குக் கரையைக் கைப்பற்றும் இஸ்ரேல் அரசாங்கத்தின் “நோக்கத்தை” உறுதிப்படுத்து கின்றது என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, கடந்த முறை டிரம்ப் முதல் முறையாக ஜனாதிபதி பதவி வகித்த போது மேற்கு கரையை இணைப்பது குறித்து விவாதிக் கப்பட்டது என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன் அதிர்ச்சித் தகவலை தெரி வித்துள்ளார். மேலும் இதுகுறித்து மீண்டும் டிரம்ப்புடன் விவாதிக்கப்படும் எனவும் குறிப் பிட்டுள்ளார். இதன் மூலம் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஏற்கனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டுள்ளன என தெரிய வந்துள்ளது.