tamilnadu

img

ஈரோடு : 70.58% வாக்குகள் பதிவு

ஈரோடு, பிப். 27- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க திரண்டனர்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு மகன் ஈவெரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடந்துள் ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். திங்களன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. 52 மையங்களில் அமைந்த 238 வாக்குச்சாவடி களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்க ளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.