பாஜகவின் இழிவான அரசிய லால் கடந்த ஒன்றரை வருட மாக வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலம் வன்முறையால் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த வன் முறைக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலே யே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று ஜிரிபாம் மாவட்டத்தில் ரோந்து சென்ற பாது காப்புப்படை மீது மர்மக்கும்பல் துப் பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்ப வத்தில் சிஆர்பிஎப் 20ஆவது பட்டாலி யன் பிரிவு கமாண்டோ அஜய் குமார் ஜா உயிரிழந்தார். மேலும் மணிப்பூர் காவல்துறையின் சப்இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் முள்ளனர். பலியான சிஆர்பிஎப் கமாண்டோ பீகாரைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவத்தால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.