tamilnadu

வேலூர், மதுரை முக்கிய செய்திகள்

பராமரிப்பு: ரயில் சேவையில் மாற்றம்

வேலூர், ஆக. 1- அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரி வில், லத்தேரி பணிமனையில் பராமரிப்பு  பணி நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஆக. 2) முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை  ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. ஜோலார்பேட்டை - அரக்கோணத்திற்கு மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படும் பயணி கள் ரயில் வெள்ளியன்று ரத்து செய்யப்படு கிறது. வெள்ளியன்று இயக்கப்படும் இரட்டை  அடுக்கு விரைவு ரயில் காவனூரில் மட்டும் 25 நிமிடங்கள் நின்று செல்லும். மைசூர் - தர்பாங்காவுக்கு ஆகஸ்ட் 3ஆம்  தேதி இயக்கப்படும் பாகுமதி வாராந்திர விரைவு ரயில் குடியாத்தத்தில் 140 நிமி டங்கள் நின்று செல்லும். கேஎஸ்ஆர் பெங்க ளூரு - காக்கிநாடா டவுனுக்கு ஆகஸ்ட் 3, 4  ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சேஷாத்ரி  விரைவு ரயில் குடியாத்தத்தில் 45 நிமிடங்கள்  நின்று செல்லும். சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் - மங்க ளூர் சென்ட்ரலுக்கு ஆகஸ்ட் 3, 4 ஆகிய  தேதிகளில் இயக்கப்படும் மேற்கு கடற்கரை  விரைவு ரயில் காட்பாடியில் 95 நிமிடங்கள்  நின்று செல்லும். யஸ்வந்த்பூர்-ஹெளரா வுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் குடியாத்தத்தில் 80  நிமிடங்கள் நின்று செல்லும். ஜோலார் பேட்டை- அரக்கோணத்திற்கு ஆகஸ்ட் 3,4  ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பயணிகள் ரயில் வளத்தூரில் 50 நிமிடங்கள் நின்று செல்லும்.

நீர்நிலைப் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்க தடை கோரி வழக்கு

மதுரை, ஆக. 1- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக் குடியில் நீர்நிலை பகுதிகளில் பூங்காக்களை அமைக்க இடைக்காலத் தடை கோரிய வழக்கில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்  கல் துறை முதன்மைச் செயலர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் நக ரைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை யில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். அதில்,” இந்தியா முழுவதும் 30 நக ரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட் டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதில் தூத்துக்குடியும் ஒன்று. இந்தத் திட் டத்தின் கீழ், தூத்துக்குடியில், போக்கு வரத்துப் பூங்கா, அறிவியல் பூங்கா என சுமார் 6 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பில் 15 பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது. வ.உ.சி கல்லூரிக்கு முன்பாக உள்ள வழிக்கால்வாய் உட்பட பல்வேறு நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமித்து இந்தப் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இது நீர்நிலைகளை பாதுகாப்பு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரா னது. பூங்காக்கள் அமைக்கப்பட உள்ள வழிக்கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதி கள் முன்பு மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய நிலையில் தற்போது மழைநீர் வடிகால்களாக பயன்பாட்டில் இருந்து வரு கின்றன. ஆகையால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி, வ.உ.சி கல்லூரிக்கு முன்புறம் உள்ள காண்டூயிட் கால்வாய் உட்பட நீர்நிலைப் பகுதிகளில் பூங்காக்களை அமைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணை யர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகி யோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட்5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.