tamilnadu

img

போதைக்கு எதிராக வாலிபர் சங்கம் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பரிசளிப்பு

திண்டுக்கல்,  ஜுலை 16- போதை கலாச்சாரத் திற்கு எதிராக திண்டுக் கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்ற வீரர் களுக்கு மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் எம்.பி. பரிசளித்தார்.  திண்டுக்கல் மாநக ராட்சிக்கு உட்பட்ட ரவுண்ட் ரோடு புதூர் வாலிபர் சங்க கிளை பாலா கிரிக்கெட் கிளப் சார்பாக 3ம் ஆண்டு  கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. பாலா சி.சி. மகளிர்  கிரிக்கெட் அணி நடத்திய இந்த போடடியில் 24 அணி கள் பங்கேற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு  திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் கோப்பையை வழங் கினார். இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்க நகரச்செயலா ளர் எம்.பிரேம்குமார், வாலி பர் சங்க முன்னாள் தலை வர்கள் ஏ.அரபுமுகமது, ஆர். விஷ்ணுவர்த்தன், ரவுண்ட் ரோடு கிளை தலைவர்கள் ஜெகன், சேகர், மற்றும் பாலா சி.சி. கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். (நநி)