tamilnadu

img

2 வேளை காலைச் சிற்றுண்டியை ஏற்றுக்கொண்ட உத்தமபாளையம் இஸ்லாமிய பெருமக்கள்

2 வேளை காலைச் சிற்றுண்டியை ஏற்றுக்கொண்ட உத்தமபாளையம் இஸ்லாமிய பெருமக்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய மாநாட்டில் கலந்து  கொள்ளும் பிரதிநிதிகளுக்கு இரண்டு வேளை சிற்றுண்டி உணவுக்காகும் செலவை, உத்தமபாளையத்தை சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்கான நிதியை, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதியிடம் வழங்கினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  24-ஆவது அகில இந்திய மாநாடு மது ரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடை பெறுகிறது. இதற்காக தேனி மாவட்ட  அளவில் மட்டும் 103 பேர் கொண்ட வர வேற்புக்குழு அமைக்கப்பட்டு பணி கள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. மாநாட்டு ஏற்பாட்டிற்காக வெள் ளிக்கிழமையன்று (மார்ச் 7) கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தேனி மாவட்டம் வருகை தந்தார்.

அதனொரு பகுதியாக, உத் தமபாளையத்தைச் சேர்ந்த மறைந்த  சுதந்திரப் போராட்ட வீரர் ஹாஜி கருத்த  ராவுத்தர் இல்லத்திற்கு கட்சித் தலை வர்களுடன் பாலபாரதி சென்றார். அப்போது, பாலபாரதி உள்ளிட்ட தலை வர்களை இன்முகத்துடன் வர வேற்ற கருத்த ராவுத்தர் குடும்பத்தி னர், அகில இந்திய மாநாடு மதுரை யில் நடைபெற உள்ளது மகிழ்ச்சி யாக இருப்பதாகக்கூறி மாநாட்டு பிரதி நிதிகளுக்கு ஹாஜி கருத்த ராவுத்தர் குடும்பத்தின் சார்பில் ஒரு வேளை சிற்றுண்டி வழங்குவதாக அவரது புதல்வர் ஹாஜி எம். தர்வேஷ் மைதீன்   தெரிவித்தார்.  அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உற வினர் இல்லத்திற்கு சென்றனர். தலை வர்களை இன்முகத்தோடு வரவேற்ற எம்.கே.பி. அப்துல் ரஹீம், ஒரு வேளை சிற்றுண்டிச் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்து நிதி வழங்கினர். இந்நிகழ்வின் போது கட்சியின் மூத்த தலைவர் கே. ராஜப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.எம்.  நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பி னர் சி.மு. இப்ராகிம், பாளையம் ஏரியா  செயலாளர் டி.கே.சீனிவாசன் ஆகி யோர் உடனிருந்தனர் .