சென்னை, அக். 21- தமிழகம் முழுவதும் அறநிலை யத்துறை சார்பில் 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, திங்களன்று (அக்.21) திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் 31 ஜோடி களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் திருமணம் நடத்தி வைத்தார். அறநிலையத்துறை சார்பில் 4 கிராம் தங்கத் தாலி மற்றும் கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பொரு ட்கள் அடங்கிய ரூ. 60 ஆயிரம் மதிப்பி லான சீர்வரிசைகளையும் புதுமணத் தம்பதிகளுக்கு வழங்கினார். 226 கோயில்களில் குடமுழுக்கு இதனைத் தொடர்ந்து பேசிய முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டு களில் 2 ஆயிரத்து 226 கோவில் களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ள தாகவும், 10 ஆயிரத்து 238 கோவில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 9 ஆயிரம் கோவில்களில் தற்போது பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், “பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்து கின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர் கின்றனர்” என்று குறிப்பிட்ட அவர், “அனைவரின் உரிமைகளைக் காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது. தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதி அர்ச்சகர் என முத்தாய்ப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. கோவில்களில் அன்னதானத் திட்டம் மூலம் நாள்தோறும் 92 ஆயிரம் பேர் பசியாறுகின்றனர். கடந்த ஆட்சி யில் செயல்படுத்தப்படாமல் இருந்த தங்க முதலீடு திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.