tamilnadu

img

இரண்டு ஆண்டுகள் கழித்து பழிவாங்கும் புதுச்சேரி பல்கலைக்கழகம்

புதுச்சேரி, டிச. 28- புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல மடங்கு உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்திற்கு எதிராக கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம்  தேதி முதல் 35 நாட்களுக்கு மேலாக மாணவர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது.  புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர் பேரவைக்கு எதி ராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து நீதி மன்ற தலையீட்டின் காரணமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை பழி வாங்கும் நோக்கில் ஒன்றரை ஆண்டு கள் கழித்து தற்போது மாணவர் பேர வைத் தலைவர் பரிட்சையாதவ் உள்ளிட்ட 11 மாணவர்கள் 5 ஆண்டு கள் புதுச்சேரி பல்கலை.யில் கல்வி யைத் தொடர தடை, 5 ஆண்டுகள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைய தடை, 10000 ரூபாய் அபராதம் என அடாவடியாக தண்டனை அறிவிப்பு களை வெளியிட்டுள்ளது. இதை இந்திய மாணவர் சங்கம் வன்மை யாகக் கண்டித்துள்ளது. ஜனநாயக ரீதியில் அரசியல் அமைப்பு சட்டத் திற்கு உட்பட்டு போராடிய மாண வர்கள் மீது 18 மாதங்கள் காத்திருந்து பழி வாங்கும் செயலில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வா கத்தை  இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழுவும், தமிழ் மாநிலக்குழுவும் கடுமையாக விமர் சித்துள்ளன. சட்டத்திற்கு புறம்பாக ஜனநாயக குரல்வளையை, கல்வி வளாக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க நினைக்கும் பல்கலைக்கழக நடவடிக்கையை எதிர்த்து அனைத்து மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளும் கண்டனம் எழுப்பிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாணவர் போராட்டம்

இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக் கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் புதுவை பிரதேச தலைவர்  ஜெயப்பிர காஷ், செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் கண்டன உரைஆற்றினார்கள். பிரதேச துணை செயலாளர் சச்சின் மற்றும் பிரதேசக் குழு நிர்வாகிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு எதிரான புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வா கத்தின் சட்ட விரோத தடை ஆணை யை திரும்பப் பெறக் கோரி அனை த்துக் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது குறிப் பிடத்தக்கது.