இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து மொழிகளிலும், மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடங்களை பயில்வதற்கு பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, நாட்டின் பன்முக கலாச்சாரங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதை ஊக்குவிக்கும்.
புதுதில்லி, நவ.20- கட்டாய திறன் மேம்பாட்டு பாடத் தேர்வை இந்தி மொழியில்தான் எழுத வேண்டுமென தில்லி பல்க லைக்கழகம் வெளியிட்டுள்ள அறி விப்பை திரும்பப் பெற்று, ஆங்கில மொழியில் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நவ.19 அன்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சேர்ந்த அனைத்து இளநிலை மாணவர்களும் இந்தித் தேர்வுக்கு பதிவு செய்து கொள்ள வேண்டுமென கடந்த நவம்பர் 11 அன்று தில்லி பல்கலைக்கழகம் அறி விப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு இந்த தேர்வு கட்டாயமாக்கப்பட் டுள்ளது. ஏற்கனவே திறன் மேம்பாடு சம் பந்தப்பட்ட படிப்புகளை ஆங்கில வழியில் கற்பதற்கான/தேர்வு எழுது வதற்கான முறை இருந்தது. ஆனால், தற்போது புதிதாக பல்க லைக்கழகத்தில் சேரும் மாண வர்கள், இந்தி அல்லது சமஸ்கிரு தம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய பல்கலைக்கழகமாக திகழும் தில்லி பல்கலைக்கழகம் ஒன்றிய அரசின் நிதி மூலம் இயங்கி வருகிறது.
இங்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து பத்தா யிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர்கின்ற னர். பல்கலைக்கழகம் திறந்தவெளி யாக இருப்பதுடன், மாணவர்களின் பன்முகத்தன்மையை மதிப்பதாக வும் இருக்க வேண்டும். பட்டம் பெறு வதற்கு இந்தி தேர்வு கட்டாயம் எனக் கூறுவது கணிசமான மாண வர்களை விலக்கி வைப்பதாகும். முன்பு ஆங்கில மொழியில் கற்க வாய்ப்பு இருந்த கட்டாய திறன் மேம்பாட்டு படிப்பு மற்றும் பிற பாடத்திட்டங்களை தற்போது இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் மட்டுமே படித்து தேர்வு எழுத முடியும் என் பதை இவை வெளிப்படுத்துகின் றன. எனவே, தாங்கள் இதில் தலை யிட்டு, பட்டம் பெறுவதற்கு இந்தி தேர்வு கட்டாயம் என்பதை பல்க லைக்கழகம் திரும்பப் பெற வேண் டும். பல்கலை.யின் இதுபோன்ற நட வடிக்கைகளுக்கு வரன்முறை விதித்து, கட்டாய திறன் மேம்பாட்டு படிப்புகளில் மீண்டும் ஆங்கில வழி தேர்வை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தி யாவில் பட்டியலிடப்பட்ட அனை த்து மொழிகளிலும், மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடங்களை பயில்வதற்கு பல்கலைக்கழகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். இது, நாட்டின் பன்முக கலாச்சாரங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதை ஊக்குவிக்கும். இத னால், நாடு முழுவதும் உள்ள மாண வர்களுக்கு, தில்லி பல்கலைக்கழ கம் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு இடமாக திகழ்வது மட்டுமின்றி, இந்தி திணிப்பு பற்றிய அச்சத்தை போக்குவதாகவும் அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.