திமுக தலை வரும் முதல்வ ருமான மு.க. ஸ்டாலின், ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பிலான நேர்காணலுக்கு பதிலளித்துள்ளார். அதை தமது ‘எக்ஸ்’ பக்கத்திலும் பதிவிட் டுள்ளார். அந்த கேள்விகளில், ஒன்றிய பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு முதல்வர் அளித்துள்ள பதில் வருமாறு: தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டை முழுவதுமாகப் புறக்கணிக்கிறார் கள்! கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் இல்லை! பெயர்கூட சொல்வதில்லை. மாநிலங்களை ஒப்பிட்டு ஒன் றிய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளிவிவரங்களிலும், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறார்கள்; ஆனால், பணம் மட்டும் தர மாட் டோம் என்று முரண்டு பிடிக்கிறார் கள்; மாநில அரசின் நிதியை வைத்தே திட்டங்களைச் செய்யுங் கள் என்று சொல்கிறார்கள்... மாநில அரசின் நிதியை வைத்து நாம் பல திட்டங்களைச் செய்து கொண்டிருந்தாலும், ஒன்றிய அர சின் நிதிப் பங்களிப்பு கிடைத்தால் தானே இன்னும் சிறப்பாக செயல் பட முடியும்! நம்முடைய மாணவர்கள் படிப்பதற்கான நிதியைக்கூட கொடுக்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஏற்கனவே கொடுத்துக் கொண்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தி னால் என்ன செய்வது? இவ்வாறு ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கி றது; நாமும் தொடர்ந்துபோராடிக் கொண்டே இருக்கிறோம்! இதில், நம்முடைய உரிமை யைக் கேட்பதையே “அற்பசிந் தனை” என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார்... ஒன்றிய அரசில் இருப்பவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது! இவ்வாறு முதல்வர் குறிப்பிட் டுள்ளார்.