tamilnadu

img

இந்தியாவில் அதிகளவில் இணைய பயன்பாடு

வேலூர், ஆக. 18- இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகளவில் உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். வேலூர் விஐடி பல் கலைக்கழகத்தில் 38ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்றது. வேந்தர் டாக்டர் கோ.விசுவ நாதன் தலைமை தாங்கி னார்.  ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு மாண வர்களுக்கு 6,238 இளநிலை  மற்றும் 2,381 முதுநிலை  மற்றும் 278 ஆராய்ச்சி மாண வர்கள் என 8,619 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 65 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர். விப்ரோ நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள் உலகளாவிய தலைவர் சஞ்சீவ் ஜெயின், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத்  தலைவர் காதம்பரி ச.விசுவ நாதன், துணைவேந்தர் டாக்டர் ராம்பாபு கோடாலி,

 இணை துணை வேந்தர் டாக்டர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி. ஜெய பாரதி, பேராசிரியர்கள் உட்பட மாணவர்கள் பங்கேற் றனர். விழாவில் அமைச்சர்  வி.கே.சிங் பேசுகையில், “நீங்கள் கற்ற கல்வியை  எப்படி பயன்படுத்து கிறீர்கள்? என்பதை பொறுத் துதான் உங்கள் எதிர்காலம் அமையும்”என்றார். வட மாநில மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு உத்தர பிரதேசத்தில் ஒரு விஐடி பல்கலைக்கழகத்தை துவங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் அதிக அளவில் இணைய பயன் பாடு உள்ளது. அமெரிக்க, சீன நாடுகளை காட்டிலும் நமது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பு என்ன என்பதை  உணர்ந்து படிக்க வேண்டும்  என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் தேவை. கடின உழைப்பு, தொடர் முயற்சி மற்றும்  அறிவு சார்ந்த புத்தகங்கள்  படிப்பதன் மூலம் வாழ்க் கையில் முன்னேற்றம் காண லாம் என்றும் வி.கே.சிங் தெரிவித்தார்.