அறந்தாங்கி, நவ.4 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில், ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது. இதற்கு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன், அமுதா மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐந்து பிரிவுகளாக கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வண்ணம் தீட்டுதல், கதை சொல்லுதல், திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேட போட்டி, தனிப்பாடல், பேச்சுப்போட்டி, தேச பக்தி பாடல்கள் மெல்லிசை பாடல்கள், மாறுவேட போட்டி, களிமண் பொம்மைகள் செய்தல் மற்றும் கிராமிய நடனம், பரதநாட்டியம் போன்ற போட்டிகள் நடைபெறுகின்றன. கலைத் திருவிழாவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.