tamilnadu

img

ஒன்றிய அரசு திட்டங்களுக்கும் மாநில நிதியிலிருந்து செலவு!

சிவகங்கை, ஜன. 22 - ஒன்றிய அரசின் திட்டங்களையும் கூட, மாநில அரசின் நிதியைப் பயன் படுத்தித் தான் செயல்படுத்தி வருகிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் புதனன்று (ஜன.22) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வரவேற்றார். அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் முதல்வருக்கு செங்கோல் வழங்கினார். 

மணிமண்டபம் திறப்பு

தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின்  ரூ. 51.37 கோடியில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதில் சிவகங்கை அருகே நகரம்பட்டியில் ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி சிலை யுடன் கூடிய மணி மண்டபத்தை திறந்து வைத்தார்.

நலத்திட்டங்கள்

ரூ. 164 கோடியில் 33 புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டினார். அதில் சிவ கங்கையில் வேலுநாச்சியார் மணிமண்ட பம் அருகே ரூ. 1.07 கோடியில் மன்னர்கள் மருது சகோதரர்கள் சிலை அமைக்கவும், வீறுகவியரசர் முடியரசனுக்கு காரைக்குடி யில் ரூ. 50 லட்சத்தில் சிலை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். 53 ஆயிரத்து 039 பயனாளிகளுக்கு ரூ. 161.11 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகை யில், “தற்போது தமிழகம் திவாலாகி விட்டது என்று புது புரளியை கிளப்பி வரு கின்றனர். தவழ்ந்து, தவழ்ந்து தமிழகத்தை தரைமட்டத்துக்கு அனுப்பியவர்கள், பொய்யாலும், அவதூறுகளாலும் வீழ்த்த முடியுமா? என்று பார்க்கின்றனர்” என்று குற்றம் சாட்டிய முதலமைச்சர், “திமுக ஆட்சியில் உபரி வருவாய் மாநிலமாக விட்டுசென்ற தமிழகத்தை 2013 முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அதி முக அரசு. தொடர்ந்து அதிக பற்றாக்குறை  மாநிலமாக மாற்றிவிட்டு சென்றனர். நெருக்கடியாக இருந்த தமிழகத்தை நாங்கள் மீட்டுள்ளோம். அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு இணக்கமான ஒன்றிய அரசு இருந்தது. அப்போது எதை யும் கேட்டுப் பெறவில்லை. பதவிக்காக மட்டும் புதுதில்லிக்கு சென்றனர். ஆனால் அதே ஒன்றிய அரசு, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழக அரசாக பார்க்காமல், கொள்கை எதிரிகளாக பார்த்து திட்டங் களை முடக்குகிறது” என்றும் தெரிவித்தார்.

ஓரவஞ்சனையை மீறி முன்னேறுகிறோம்

மேலும், “ஒன்றிய அரசின் ஓரவஞ்ச னையை மீறித் தான் தமிழகத்தை முன்னேற்றி இருக்கிறோம். ஒன்றிய அரசின் திட்டங்களையும் மாநில அரசு  நிதியை செலவு செய்து தான் செயல் படுத்தி வருகிறோம். அதிமுக கையாள காத நிர்வாக சீர்கேடு ஒருபுறம், ஒன்றிய அரசின் பாராமுகம் மற்றொருபுறம், இருந்தும் முன்னேற்றி வருகிறோம். தமி ழகத்தை ஒன்றிய பாஜக அரசு எப்படி வஞ்சிக்கிறது என்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அதை எதிர்க் கட்சித் தலைவர் காதில் வாங்குவதில்லை. சாதாரணமாக தமிழகம் திவாலாகி விட்ட தாக கூறுகிறார். திவாலாக வேண்டும் என்பது தான் அவரது எண்ணமா? என்றே கேட்க தோன்றுகிறது” என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இவ்விழாவில், அமைச்சர்கள் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், கோவி. செழியன், மு.பெ. சாமிநாதன், கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.