tamilnadu

img

நவீன தொழிநுட்பக் கருவிகளை பயன்படுத்தி சட்டவிரோத தொலைபேசி மையம்

தேனி, ஜூலை 10- நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி சட்டவிரோத தொலைபேசி மையம் அமைத்து, பிஎஸ்என்எல் மற்றும் தனியார் செல்போன் டவர் மூலம் வெளி நாடுகளுக்கு தொடர்பு கொண்ட கேர ளாவை சேர்ந்த இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டு களை பறிமுதல் செய்தனர். தேனியில் பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் மையத்து க்கு பின்புறம் உள்ள ஒரு வீட்டில் சந்தேகப் படும்படியான நபர்கள் வசிப்பதாக மத்திய உளவுத் துறையினருக்கு  கிடைத்த  தக வலின் பேரில் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டனர். அப்போது பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் இருந்து நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி அலைக்கற்றைகளை திருடி பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது தொடர் பாக தேனி பி.எஸ்.என்.எல். அலுவலக தொழில்நுட்ப பிரிவு அதிகாரி முனி யாண்டி தேனி காவல் நிலையத்தில்   புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  அந்த வீட்டின் கதவை திறந்து சோதனை  செய்தனர். அப்போது அங்கு அலைக் கற்றைகளை திருடும் நவீன தொழில் நுட்பக் கருவிகள், ஏராளமான செல்போன் சிம்கார்டுகள் இருந்தன.  இந்த அலைக்கற்றை திருட்டில் ஈடு பட்ட நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர்  கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி பகுதி யை சேர்ந்த சஜீர் (வயது 41), அதே  பகுதியை சேர்ந்த முகமது ஆஷிப் (21) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி னர். அவர்களை சனிக்கிழமை  இரவு தேனியில் ரகசிய இடத்தில் வைத்து  போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இதேபோல் தேனி யில் மற்றொரு வீட்டிலும், ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் 2 வீடுகளி லும் தொழில்நுட்ப கருவிகளை வைத்து  பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் செல்போன் டவர்களில் இருந்து அலைக் கற்றைகளை திருடி பயன்படுத்தியதாக தெரியவந்தது.  அவர்கள் தெரிவித்த  மற்ற 3 வீடுகளி லும் நடத்திய சோதனையில்  ஆயிரத்துக் கும் மேற்பட்ட செல்போன் சிம் கார்டுகள் மற்றும் அலைக்கற்றைகளை திருடு வதற்கான 31 நவீன தொழில்நுட்பக் கருவி கள் ஆகியவற்றை கைப்பற்றினர். இது தொடர்பாக சஜீர், முகமது ஆஷிப் ஆகிய  2 பேரையும்  கைது செய்தனர். 

ஐஜி விசாரணை 

 தென்மண்டல காவல்துறை  ஐ.ஜி. அஸ்ரா கார்க் தேனிக்கு வந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினார். மேலும் மத்திய உளவுப்பிரிவு, மத்திய சிறப்பு புல னாய்வு பிரிவு போலீஸ் அதிகாரிகள், கியூ  பிரிவு போலீசார் ஆகியோரும்  விசார ணை நடத்தினர்.  கைதான நபர்களுக்கு பயங்கர வாத அமைப்புகள், நக்சலைட் அமைப்பு களுடன் தொடர்பு இருக்கிறதா? எதற்காக இந்த அலைக்கற்றை திருட்டில் ஈடு பட்டார்கள்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கேரளா வை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை  பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயிரத்திற் கும்  மேற்பட்ட சிம் கார்டுகள் எப்படி கிடைத்தது? தனியார் செல்போனில் அலைக்கற்றை திருடியது எப்படி? அவர்கள் ஏன் புகார் தெரிவிக்கவில்லை? 7 மாதமாக நடைபெறும் அலைக்கற்றை திருட்டை எப்படி கண்டறியவில்லை? தொழில்நுட்ப கருவிகள் தனி நபருக்கு எப்படி கிடைத்தது ?  என்பது குறித்தும் புலனாய்வு துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.