tamilnadu

img

கவிஞர்கள் கரிசல்குயில் கிருஷ்ணசாமி, நாறும்பூ நாதனுக்கு புகழஞ்சலி கூட்டம்

கவிஞர்கள் கரிசல்குயில் கிருஷ்ணசாமி,  நாறும்பூ நாதனுக்கு புகழஞ்சலி கூட்டம்

புதுக்கோட்டை, மே 4-  பாடகர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி, எழுத்தாளர் நாறும்பூ நாதன் ஆகியோரின் மறைவையொட்டி, புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில்  நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்திற்கு மாவட்டச் செயலளர் எம்.ஸ்டாலின் சர வணன் தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் எஸ்.சங்கர், தமுஎகச மாநில  துணைத் தலைவர்கள் நா.முத்து நிலவன், ஆர்.நீலா, புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் தங்கம் மூர்த்தி, தமுஎகச மாவட்டத் தலை வர் ராசி. பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர். பாடகர்கள் கிடாக்குழி மாரியம் மாள், இரா.தனிக்கொடி, ரெ.வெள்ளைச்சாமி, முத்து முகமது, சுதந்திர குமார் உள்ளிட்டோர் இசை அஞ்சலி செலுத்தினர்.