மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரளாவில் மாதர் சங்க இயக்கத்தை கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்காற்றியவருமான தோழர் சரோஜினி பாலானந்தன் (86) அவர்கள் ஆகஸ்ட் 29, 2023 அன்று கொச்சியில் காலமானார். சரோஜினி பாலானந்தனின் உடலுக்கு கேரள முதல்வரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் பி.கே.ஸ்ரீமதி, பி.ராஜீவ், சி.எஸ்.சுஜாதா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த சரோஜினி பாலானந்தன், ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் தேசிய துணைத் தலைவராகவும், கேரள மாநிலக் குழுத் தலைவராகவும், நீண்ட காலம் சிபிஎம் கேரள மாநிலக் குழு உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.