விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன்,விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.