போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 6-இல் கோட்டை நோக்கி பேரணி
அரசு போக்குவரத்துக் கழகங் களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட் டில் ஒதுக்கி வழங்கக் கோரி மார்ச் 6 ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங் கள் வைக்கும் கோரிக்கை மீது அதி காரிகள் பதிலளிக்க மறுக்கின்றனர்.
எனவே, போக்குவரத்துத் துறை செயலாளரை சந்தித்து கோரிக்கை களை விளக்கினோம். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்காமல் பிரச்ச னைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை வலியுறுத்தினோம். மின்சார வாரியம் யூனிட் 12 ரூபாய்க்கு வாங்கி, 2.25 ரூபாய் மக்க ளுக்கு கொடுக்கிறது. அதற்கான நட்டத்தை அரசு ஈடு செய்கிறது. பேருந்துகளை ஒரு கி.மீ. இயக்க 75 ரூபாய் வரை செலவாகிறது. 35 ரூபாய்தான் வருவாய் வருகிறது. எஞ்சிய தொகையை அரசு ஈடு கட்டுவதில்லை. போக்குவரத்து கழ கத்திற்கு உள்ள 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அரசுதான் பொறுப்பு. மேலும், கழக பணத்தை எடுத்து அரசு செலவு செய்வதை கைவிட வேண்டும்.
இதனை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் சார்பில் மார்ச் 6 ஆம் தேதி கோட் டையை நோக்கி பேரணி நடை பெறும். மின்சார வாரியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி தரப்படும் ஊதியத்தை, போக்கு வரத்து தொழிலாளிக்கும் தர வேண்டும் என்கிறோம். இதன்படி அரசு வழங்கினால் கடந்த ஒப்பந்தத் தில் கிடைத்த அதே அளவு ஊதிய உயர்வு கிடைக்கும். ஓய்வூதியர் களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் அரசு பாக்கி வைத்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒப்பந்தப்படி ஏற்படுத்தப் பட்டது. எனவே, 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத் துள்ளோம்.
அந்த வழக்கு ஓரிரு மாதங்களில் முடிவுறும். வழக்கு வெற்றி பெறும். அதன்படி, 1.4.2003-க்குப் பிறகு பணியில் இணைந்த வர்களை பழைய ஓய்வூதியத் திட்டத் தில் இணைத்தால், ஓய்வூதியர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். இதற்கு வலுவான நிர்ப்பந்தத்தை அரசுக்கு தர வேண்டும். தொமுச, ஏடிபி உள்ளிட்ட சங்கங்கள், தொழிலாளர்களின் பிரச்சனைகளில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் போக்குவரத்து கூட்ட மைப்பும் சேர அழைப்பு விடுத்து உள்ளார்கள். ஏப்.1 முதல் 4 வரை தொழிலாளர் கோடுகளை (தொழிலா ளர் கோடுகள் என்பது தொழிலாளர் களின் உரிமைகள், பொறுப்புகள், வேலை நிலைமைகள், நலத்திட்டங் கள் ஆகியவற்றை குறிக்கும் சட்டங்கள் மற்றும் வரையறைகளா கும்) ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ளது. இந்தச் சூழலில் இனி ஒன்றி ணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.