tamilnadu

img

உயர் கல்வியில் நூறு சதவீதத்தை ஐந்தாண்டுகளில் எட்டுவோம்

தஞ்சாவூர், மே 14-   தமிழகத்தில் இன்னும் ஐந்தாண்டுகளில் உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டும் என்றார் போக்கு வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவ சங்கர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுக் கல்வித் துறை சார்பில் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.  செல்வம் அறக்கட்டளையின் முதலா மாண்டு விழாவில் அவர் பேசியது: இந்திய ஒன்றியத்தில் கல்வியில் மிகச்  சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. ஒன்றிய  அரசு உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக் கையை 51 சதவீதமாக உயர்த்த வேண்டும்  என இலக்கு நிர்ணயித்தது. மற்ற மாநிலங் களில் உயர் கல்வி பெறுபவர்களின் விகிதம்  26 சதவீதமாக இருந்ததே இதற்குக் கார ணம். ஆனால், தமிழகத்தில் உயர் கல்வி பெறு பவர்களின் விகிதம் ஏற்கெனவே 52 சதவீத மாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்னும்  ஐந்தாண்டுகளில் உயர் கல்வி பெறுப வர்களின் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டும். தமிழக முதல்வர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலம், தமிழகத்திலுள்ள பெண் குழந்தைகள் நிச்சயமாக கல்லூரிக் கல் வியை முடிப்பர். அதே நேரத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை வழங்கி வரு கிறார் என்றார்.  இவ்விழாவுக்கு துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் தலைமை வகித்தார். புதுக் கோட்டை மாவட்டத்தில் தாய்த் தமிழ்ப் பள்ளி கள் நடத்தி வரும் சு.பாபு ராஜேந்திரனின் தமிழ் வழிக் கல்வி சேவையைப் பாராட்டி, அவ ருக்கு அமைச்சர் விருது வழங்கினார்.கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு  வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வா.செ.செல்வம், மூத்த குடிமக்கள் நலச் சங்க நிறுவ னர் புலவர் ஆதி. நெடுஞ்செழியன், அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத்தலைவர் இரா.குறிஞ்சிவேந்தன் ஆகியோர் பேசினர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன் பழகன், மேயர் சண். ராமநாதன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, பதி வாளர் (பொறுப்பு) சி. தியாகராஜன் வரவேற் றார். நிறைவாக, இணைப் பேராசிரியர் ஞா.  பழனிவேலு நன்றி கூறினார்.