இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளை யாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றியை ருசித்து தொடர் சமனில் உள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி செவ்வாயன்று தென் ஆப்பிரிக்க நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் கடும் பயிற்சியுடன் களமிறங்குகின்றன. இதனால் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.