சென்னை, பிப். 16 - தமிழ்நாட்டில் திருநர்களின் நலன் காக்க தனிக்கொள்கை உருவாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் திருநர் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர் (பால் புதுமையர்) கொள்கை தொடர்பாக உயர்நீதி மன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலை யில், தனித்தனி கொள்கைகள் உரு வாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யை திருநர் அமைப்புகள் வலியுறுத்தி யுள்ளன. இந்த முக்கியமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டு மென சிபிஐ(எம்) கேட்டுக்கொள்கிறது. எல்.ஜி.பி.டி.கியூ.ஐ.ஏ+ (LGBTQIA+) எனப்படும் வெவ்வேறு பாலின அடையாளத்தவர் ஒரே குழுவாக குறிப்பிடப்பட்டாலும் கூட, திருநர் என்போர் தம் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் ஒதுக்குதல்களும், துன்புறுத்தல்களும் சில குறிப்பான கொள்கை தலையீட்டின் மூலம் மாற்றி யமைக்க தேவையுள்ளது
. தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது திருநர்களின் பிரச்னை என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். ஏற்கனவே, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இந்த பிரி வினருக்கென்று தனிக்கொள்கை உருவாக்க வேண்டுமென மாநி லங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே, திருநர்களுக்கு என முதன் முதலில் கொள்கைகளை உருவாக்கியது கேரள இடதுசாரி அரசு என்பதும்; திரு நங்கையரின் கோரிக்கை அடிப்படை யில், 2008ல் தமிழ்நாடு திருநங்கையர் நலவாரியத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு என்பதும் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்று. திருநருக்கு நிகழ்ந்துவரும் சமூக ஒதுக்குதல்கள் காரணமாக யாசித்தல், பாலியல் சுரண்டல் போன்ற அவலங் களுக்குள் தள்ளப்படுவதை தடுக்க, இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்யும் விதத்தில் திருநர்களுக்கான தனிக்கொள்கையை உருவாக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.