திருப்போரூர், ஆக.2- செங்கல்பட்டு மாவட்டம், திருப் போரூர் பேரூராட்சிக்குட்பட்ட கந்த சாமி தேவஸ்தானம் கோவில் நிர்வாக த்திற்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான சர்வே எண் 95ல் சுமார் 17 ஏக்கர் நிலம் மற்றும் சர்வே எண் 110பி-ல் சுமார் 4 ஏக்கர் கிராம நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்தும், விவ சாயம் செய்தும் வருகின்றனர். கந்தசாமி கோவில் நிர்வாகம் கடந்த 1987 ஆம் ஆண்டில் ஒன்றாம் எண் கொண்ட பட்டாவில், சர்வே எண்களில் சிலவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சொத்தை ஒப்படைவு செய்ய செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பட்டா எண் 1ல் அடங்கிய சொத்துக்கள் அனைத்தும் ‘எஸ்டேட்’ சொத்துக்கள் என்றும் ‘இனாம் ஒழிப்பு’ சட்டத்தின் படி அனைத்து விதமான எஸ்டேட்டுகள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், திருப் போரூர் கிராம ‘ரயத்து எஸ்டேட் கிராமம்’ என்றும் கந்தசாமி கோயி லுக்கு எந்தவித உரிமையும் பாத்தி யையும் கிடையாது என்று முன்சீப் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முன்சீப் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என்று உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றது. பட்டா எண் 1ல் உள்ள நிலங்கள் குறித்து மறு விசாரணை செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கி யுள்ளது. இந்நிலையில், கோவில் நிர்வாகம் பட்டா எண் 1ல் உள்ள விவசாயிகள் மற்றும் குடியிருப்போர்களை அகற்ற வும், அந்த நிலத்தை ஏலம் விட்டு கோவில் நிர்வாகத்திற்கு சொந்த மானது என பதிவேடுகளை புதிய தாக தயார் செய்ய ஏற்பாடுகள் செய்து ள்ளது. இதனடிப்படையில், வருகின்ற 7, 8 ஆகிய தேதிகளில் இந்த இடங்களை ஏலம் விட ஏற்பாடுகள் செய்து அறிவிப்புகள் செய்துள்ளது.
நீதிமன்றங்களின் உத்தரவை மதித்து கந்தசாமி கோயில் தேவஸ்தா னம் தற்போது விடுத்துள்ள ஏல அறி விப்பை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்று, பட்டா எண் 1ல் உள்ள விவசாயிகள் மற்றும் குடியிருப் போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய செய லாளர் மாரி தலைமையில் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத் தின் மாவட்டத் தலைவர் வி.அரிகிரு ஷ்ணன், செயலாளர் கே.வாசுதேவன், துணைத் தலைவர் ஜி.மோகனன், வட்டத் தலைவர் எச்.முருகேசன், சிபிஎம் வட்டச் செயலாளர் எம்.செல்வம் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து விவ சாயிகள் சங்கத்தின் பொதுச் செய லாளர் சாமி நடராஜன் பேசினார். அ.கோமதன் நன்றி கூறினார். முன்னதாக வேம்படி விநாயகர் கோயில் அருகிலிருந்து ஊர்வலமாகச் சென்று துணை வட்டாட்சியரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.