tamilnadu

img

பதவிப் பிரமாணம் எப்போது?

நாயக்கனேரி ஊராட்சி தலித் பெண் தலைவர் இந்துமதிக்கு நீதி கேட்டு  தலைமைச் செயலாளரிடம் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டம், நாயக்கநேரி ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திருமதி இந்துமதிக்கு உடனடியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் க. சுவாமிநாதன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர்  தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: 

2 ஆண்டுகளாகியும் பதவியேற்க முடியாத அவலம்

திருப்பத்தூர் மாவட்டம், மாத னூர் ஊராட்சி ஒன்றியம், நாயக்க நேரி ஊராட்சியில் 2021-இல் நடை பெற்ற தேர்தலில், பட்டியல் சாதி  (பெண்) ஒதுக்கீட்டில் தேர்ந்தெ டுக்கப்பட்டு வெற்றிக்கான சான்றி தழையும் முறைப்படி பெற்றுள்ள இந்துமதி என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை பதவி பிரமாணம் செய்து வைக்க  அரசு அதிகாரிகள் தவறியுள்ளனர். நாயக்கநேரி முன்னாள் ஊராட்  சித் தலைவர் சிவக்குமார் என்பவர்  இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடுத்த  உயர் நீதிமன்ற வழக்கைக் கார ணம் காட்டி மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பதவிப் பிரமாணத்தை இழுத்த டித்து வந்துள்ளனர்.

சட்டவிதிகளுக்குப் புறம்பாக அரசு அதிகாரிகள்

நாயக்கநேரி ஊராட்சியில், பட்டியல் சாதி மக்கள் தொகை மிகக்  குறைவாக இருக்கும் பட்சத்தில்,  அதனை பட்டியல் சாதியினருக் கான ஊராட்சியாக எவ்வாறு ஒதுக்  கீடு செய்யலாம் என்ற வாதமே  வழக்கில் முன்வைக்கப்பட்டுள் ளது. வழக்கு நிலுவையில் உள்ள  நிலையில் நீதிமன்றம் தேர்தலை  நிறுத்தி வைக்கவோ, தேர்ந்தெ டுக்கப்பட்ட தலைவரை பதவி பிர மாணம் செய்வதற்கு தடை உத்த ரவோ பிறப்பிக்கவில்லை. முறைப்  படி நடைபெற்ற தேர்தலில், போட்டி யின்றி வெற்றிபெற்ற இந்துமதிக்கு வெற்றிபெற்றதற்கான சான்றித ழும் வழங்கப்பட்டுள்ளது. 2021 செப்டம்பரில் பல மாவட்  டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மற்ற ஊராட்சித் தலைவர்கள் பதவி ஏற்ற நிலையில் நாயக்கநேரியில் மட்டும் பதவி பிரமாணம் செய் வதை வேண்டுமென்றே அரசு அதி காரிகள் தவிர்த்து வருவது சட்ட  விதிகளுக்கு புறம்பான நடவ டிக்கையாகும் என்பதை கவனப் படுத்துகிறோம்.

மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் தீர்வில்லை

இந்துமதி தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறை  அதிகாரிகளிடமும், மே 1, 2023 அன்று நடந்த கிராம சபை கூட்டத்  தில் கலந்து கொண்டும் இப்பிரச் சனை குறித்துப் பேசியுள்ளார். மாவட்ட ஆட்சியரும் கூட்டத்தில் இருந்துள்ளார். என்றாலும் தீர்வு தரப்படவில்லை.  இந்துமதி தனக்கு பதவி பிர மாணம் செய்து வைக்க கோரி 13.02.2023 அன்று தமிழ்நாடு முதல்வர், தலைமைச் செயலா ளர், முதன்மை செயலாளர், தேர்தல்  ஆணையர், மாவட்ட ஆட்சித் தலை வர், மாவட்ட கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகி யோருக்கு மனுக்களை அனுப்பி யுள்ளார். இருப்பினும் அதிகாரி கள் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தவறியுள்ளனர்.

தலித் குடும்பங்களை  ஊர் விலக்கம் செய்த  சாதி ஆதிக்க சக்திகள்

நாயக்கநேரி ஊராட்சித் தேர் தலை சிவக்குமார் (அதிமுக பிர முகர்) என்பவரது தூண்டுதல் பேரில் மக்கள் புறக்கணித்தனர். ஊராட்சித் தலைவர் தேர்தலில் இந்துமதிக்கு ஆதரவு தந்த 21 குடும்  பங்கள் ஊர் விலக்கம் செய்யப் பட்டுள்ளனர். ஊர் விலக்கத்திற்கு ஆளானவர்கள் பால் வியாபாரம் செய்ய முடியவில்லை. நிலங்க ளில் விவசாயம் செய்ய முடிய வில்லை. ஆகவே 21 குடும்பங்க ளில் பலர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். இப்போதும் அங்கே குடி யிருக்கும் இரண்டு குடும்பங்கள் மிரட்டலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 18.07. 2022 அன்று தந்த புகார் மீதும்  காவல் துறையால் மேல் நட வடிக்கை எதுவும் மேற்கொள் ளப்படவில்லை.

அதிமுக பிரமுகரை  கைது செய்ய வேண்டும்

தலைவராக வெற்றிபெற்று  இரண்டு ஆண்டுகள் ஆகி யும் இதுவரை பதவிப் பிர மாணம் செய்து வைக்கா மல் இருக்கும் திருமதி  இந்துமதிக்கு உடனடியாக பதவிப் பிரமாணம் செய்து  வைப்பதோடு - எந்தவித இடையூறும் இல்லாமல் அவர் சுதந்திரமாக பணி யாற்றுவதற்கு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்; இந்துமதிக்கு ஆதர வாக செயல்பட்ட 21 பட்டி யல் சாதிக் குடும்பங்களை மிரட்டி ஊர்க் கட்டுப்பாடு போட்டு, ஊரில் வாழ முடி யாமல் ஊரை விட்டு விரட்டி யுள்ள ஊராட்சி மன்ற முன்  னாள் தலைவர் சிவக்குமார் மற்றும் பிறர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்  தின் கீழ் வழக்கு பதிவு  செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்  டும்; இந்துமதி மற்றும்  அவ்வூரில் வசிக்கும்  பட்டியல் சாதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.