அருமனை, நவ.24- குமரியின் குற்றாலம் என அழைக்கப் படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஐயப்ப பக்தர்களாலும் சுற்றுலா பயணிகளா லும் களை கட்டுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் மலையோரப் பகுதிகளில் அமைந் துள்ள அணைக்கட்டுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பேச்சிப்பாறை, சிற்றார் போன்ற அணை களில் இருந்து உபரி நீர் வெளியேற்றப் பட்டு வந்த நிலையில், தற்போது மழை சற்று ஓய்ந்திருப்பதால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதி களவு சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் திற்பரப்பு அருவி யில் குளித்துவிட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் வருகை அதிகரிக்கிறது.