மதுரை, ஜூன் 30- தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தியாவை காவிமயமாக்க பாஜக முயற்சி செய்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். ஞாயிறன்று மேலவளவு தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து வதற்காக மதுரை வந்திருந்த திருமா வளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகள், பெண்களுக்கு இட ஒதுக் கீடு வழங்கும் வகையில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது, 1996ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் தலித்துகளுக்கு ஒரு மைல் கல். தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். தமிழகத்தில் சமீப காலமாக சாதி வெறி சக்திகளால் ஆணவக் கொலை கள் நடந்து வருகின்றன. இதைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்கவில்லை. ஆணவக் கொலைகளை தடுக்க நாடாளு மன்றத்தில் குரல் கொடுப்பேன். இதற்கு தனி சட்டம் கொண்டு வர வேண்டும், ஆணவக் கொலைகளைக் கண்டித்து கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டு வருகிறதா எனக் கேள்வி எழுகிறது, நீட் தேர்வு ரத்து நீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேரள அரசு குடிநீர் தர முன் வந்தாலும் வறட்டு கவு ரவத்தால் குடிநீரை மறுத்துள்ளது. தமி ழகத்திற்கு போர்க் கால நடவடிக்கை யின் மூலம் குடிநீர் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை மிகவும் ஆபத்தானது. தேசியக் கல்விக் கொள்கையை தன்னிச்சை யாக செயல்படுத்தி, இந்தியாவை காவி மயமாக்க முயல்கிறது பாஜக. மும்மொழிக் கொள்கையையும் திணிக்கக் கூடாது. ஒரே நேரத்தில் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் எதிர்க்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.