மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
திருவண்ணாமலை, மே 25- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி யில் பி.எஸ்.என்.எல். ஊழிராகப் பணியாற்றி கொரோனாவில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மு.பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவரது படைப்புக்களை அவரது மனைவி சம்யுக்தா மற்றும் அவர்களது மகன் லெமூரியாச் செழியன், மகள் தேன் தமிழ்மொழி ஆகியோர் இணைந்து மூன்று நூல்களாக்கி வெளியிட்டனர். இந்நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னர் சி. அப்பாசாமி தலைமை தாங்கினார். பெ.கண்ணன் முன்னிலை வகித்தார். நூலா சிரியரின் தம்பி மு.தென்னரசு வரவேற்புரை நிகழ்த்தினார். ‘விஞ்ஞானப்பூர்வ சிந்தனை’ கட்டுரைத் தொகுப்பினை எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். பெற்றுக்கொண்டு மாரிமுத்து உரையாற்றினார். ‘இன்னொரு தாய்’ என்னும் சிறுகதை நூலினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கவிஞர் நா.முத்துவேலன் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். திராவிடர் கழக அதிய மான் நூலைப் பெற்றுக் கொண்டார். ‘நியூட்ரான் நட்சத்திரங்கள்’ கவிதைத் தொகுப்பினை முனைவர் கு. பிரேமா வெளியிட்டு உரை நிகழ்த்தினார். நூலைப் பெற்றுக் கொண்டு தி.முக எ.புகழேந்தி உரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர் வி.வெங்கட்ராமன், டாக்டர் இ.மதன்குமார், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியைச் சார்ந்த தாஸ், தி.முக பகுத்தறிவாளர் அணி சன்.கதிரவன், அறம் பதிப்பக உரிமையாளர் மா.அமரேசன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைப் பயிற்றுநர் பி.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் மனைவி சம்யுக்தா ஏற்புரை வழங்கினார். பா.லெமூரியச் செழியன் நன்றி கூறினார்.