tamilnadu

img

மாட்டு வண்டிகளுக்கு தனியாக மணல் குவாரி அமைத்து தருக!

தஞ்சாவூர், நவ.9 - மாட்டு வண்டிகளுக்கு என தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி, திருச்சிற்றம்பலம் கடை வீதியில் 300-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி, ஆயி ரக்கணக்கான மாட்டு வண்டித் தொழிலா ளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலம் கடைவீதியில், புதன்கிழமை காலை மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்க கௌரவத் தலைவர் ஏ.சி.சி. ராஜராஜன் தலைமை யில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத் தலைவர்கள் பலர், பட்டுக் கோட்டை - அறந்தாங்கி சாலை உள்ளிட்ட அனைத்து வழிகளிலும், தாங்கள் கொண்டு வந்த மாட்டு வண்டிகளை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில், “அரசு ஏற்கனவே அறிவித்தவாறு மணல் மாட்டுவண்டிக் கென சின்ன ஆவுடையார்கோயில், பெத்தனாட்சிவயல், குறிச்சி ஆகிய இடங்களில் மணல் குவாரி அமைத்து தர வேண்டும். காவல்துறையினரால் பறி முதல் செய்யப்பட்ட, மாட்டு வண்டிகளை திரும்பத் தர வேண்டும். தொழிலாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து  செய்ய வேண்டும். வருவாய்த் துறை, காவல்துறையினர் மாட்டுவண்டி தொழி லாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது. தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கை யில் கூறியவாறு, மணல் மாட்டுவண்டி களுக்கு என குவாரி அமைத்து கொடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, அங்கு வந்த பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபா கரன், பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிரிதிவி ராஜ் சவுகான், பட்டுக்கோட்டை வட்டாட்சி யர் ராமச்சந்திரன் ஆகியோர், மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் பிரமு கர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாட்டு வண்டித் தொழிலாளர் களின் கோரிக்கையை அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்று, 15 நாட்களில் பிரச்சனைகளை தீர்க்க உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த னர்.  இதை ஏற்று, 3 மணி நேரம் நடை பெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.  இதுகுறித்து மாட்டு வண்டித் தொழி லாளி நீலகண்டன் கூறுகையில், “தமிழ கத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மாட்டு  வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதா ரம் பாதிக்காத வகையில் மணல் அள்ள  அனுமதிக்கப்படும் என தேர்தல் வாக்கு றுதியில் தெரிவித்தனர். ஆனால் தற்  போது மாட்டு வண்டி தொழிலாளர்கள்  மீது வழக்குகள் போடுவது, வண்டி களை பறிமுதல் செய்வது போன்ற செயல்களால், மாட்டுவண்டித் தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 3000-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. விறகுக்குகூட பயன்படுத்த முடியாத வகையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாட்டு வண்டிகள் வீணாகி  வருகின்றன. தமிழகத்தில் புதிதாக 32  மணல் குவாரிகள் அமைக்கப்பட்ட நிலை யிலும், மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள குவாரிகளை முறையாக அமைக்கவில்லை” என்றார்.