tamilnadu

img

தீக்கதிர் திருநெல்வேலி பதிப்பு பிரகாஷ் காரத் துவக்கி வைத்தார்

திருநெல்வேலி, செப்.22- தீக்கதிர் நாளிதழின் 5வது பதிப்பாக திருநெல்வேலி பதிப்பு வெள்ளியன்று துவங்கியது.  நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீக்கதிர் நாளிதழை வெளியிட்டு திருநெல்வேலி பதிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் துவக்கி வைத்தார்.  முன்னதாக காலையில் தீக்கதிர்  நாளிதழின் நெல்லை பதிப்பு அலு வலக திறப்பு விழா  ரெட்டியார்பட்டியில்  நடைபெற்றது.  விழாவிற்கு தீக்கதிர் மதுரை பதிப்பு பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனக ராஜ், மதுக்கூர் ராமலிங்கம், என்.பாண்டி, திமுக மத்திய மாவட்டச் செய லாளர்   முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், மதிமுக மாவட்டச் செயலாளர் கே. எம். ஏ. நிஜாம், மாநகர  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன், சி.பி.எம்  மாநில குழு உறுப்பினர் கே. ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியின் தீப்பொறி பத்திரிகை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் பேசினர். விழாவில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜ், விசிக மாவட்டச் செயலாளர் முத்து வளவன் உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர். விழாவின்போது தீக்கதிர் வளர்ச்சி நிதியாக திமுக மத்திய மாவட்டச் செயலாளர் டி.பி.எம்.மைதீன் கான் ரூ.3 ஆயிரம், மதிமுக மாவட்டச் செய லாளர் கே.எம்.ஏ.நிஜாம் ரூ.5 ஆயிரம், தேவபிரகாஷ் ரூ.10 ஆயிரம், இரா.ஜவஹர் ரூ.10 ஆயிரம், எம்.எஸ்.சட்ட நாதன் ரூ.2 ஆயிரத்தையும், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கே.சங்கர பாண்டியன் தீக்கதிர் ஓராண்டு சந்தா வையும்  சி.பி.எம்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினர்.