tamilnadu

img

சென்னையில் நாளை மாற்றுத் திறனாளிகள் பெருந்திரள் தர்ணா, ஏன்? - v தோ.வில்சன், மாநிலத் தலைவர்

ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில், அக்டோபர் 23 (நாளை) அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2006 ஐ.நா. பிரகடனமும் மாற்றுத்திறனாளிகள் சட்டமும்
4     2006 ஐ.நா. பிரகடனம் மாற்றுத்திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது
4     இந்தியாவில் 2016 டிசம்பர் 2-ல் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது
4     ஆனால் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை
ஒன்றிய அரசின் பொறுப்பற்ற செயல்
4     மாற்றுத் திறனாளிகள் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வெறும் பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளது (‘திவ்யங்’ எனும் பெயர் மாற்றம்)
4    மாற்றுத்திறனாளிகள் மக்கள்தொகை 10%க்கும் அதிகமாக  இருந்தும், மிகக் குறைந்த பட்ஜெட் ஒதுக்கீடு
4    2024-ல் வெறும் 0.025% நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது
4    தேசிய நிதியம் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை
தற்போதைய நிலை
4    ஒன்றிய அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகை ரூ.300 மட்டுமே!
4    இந்தியாவில் 3.8% மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே இத்தொகை கிடைக்கிறது
4    தமிழ்நாட்டில் 50,000 பேருக்கும் குறைவானோருக்கே இத்தொகை வழங்கப்படுகிறது.
அண்டை மாநிலங்களின் உதவித்தொகை
4 புதுச்சேரி: ரூ.3,000-4,800 / 4 தெலுங்கானா: ரூ.4,016
ஆந்திரா
4 சாதாரண ஊனமுற்றோர் - ரூ.6,000
4 கடும் ஊனமுற்றோர் - ரூ.10,000
  4 வீட்டில் முடங்கியுள்ளோர் - ரூ.15,000
தமிழ்நாட்டின் தற்போதைய உதவித்தொகை
4 75% குறைவான ஊனமுடையோர் - ரூ.1,500 (5,01,287 பேர்)
4 75%க்கு மேல் ஊனமுற்றோர் - ரூ.2,000 (2,35,906 பேர்)
4 மொத்தம் 7,37,193 பயனாளிகள்
4 இத்தொகை வாழ்வாதாரத்திற்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை
கண்ணியமான வாழ்க்கைக்கு...
4    மாற்றுத்திறனாளிகளின் கண்ணியமான வாழ்வு என்பது அவர்களின்     வாழ்வாதாரத்தை பொறுத்தே அமையும்.
4    பெயர் மாற்றங்களால் மட்டும் அடிப்படை மாற்றம் ஏற்பட முடியாது.
4    ஒன்றிய அரசின் புறக்கணிப்பு காரணமாக, மாநில அரசுகளே பொறுப்பேற்க     வேண்டிய கட்டாயம் உள்ளது.
4    ஆந்திர மாநில அரசு வழங்கும் உதவித்தொகை அளவே இன்றைய வாழ்வாதார சூழலுக்கு ஏற்றது.
4    எனவே தமிழக அரசும் இதேபோன்ற உதவித்தொகையை வழங்க வேண்டும்.
தர்ணா போராட்டத்தின் கோரிக்கைகள்
1. ஆந்திராவைப் போல உதவித்தொகையை உயர்த்த வேண்டும்.
2. ஒரே துறை மூலம் உதவித்தொகை வழங்க வேண்டும்.
3. காத்திருப்போருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும்.
4. வயது வரம்பின்றி அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
5.    தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் மூலம் (MGNREGA) வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
6.    அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகள் வழங்கவேண்டும்.
7. மருத்துவ சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் அக்டோபர் 23 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணி முதல் 
மாலை 5 மணி வரை பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர்கள் மட்டு
மின்றி, சமூக ஆர்வலர்கள், சகோதர அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிப்பதோடு போராட்டத்தை வாழ்த்திப் பேசவும் உள்ளனர்.