tamilnadu

img

நூலாற்றுப் படை

“மார்க்சியம் சொல்வது என்ன?”  -  சு.வினோத்குமார்

எமிலி பர்ன்ஸ் எழுதி பேராசிரியர் வெ.பொன்னு ராஜ் தமிழாக்கம் செய்துள்ள “மார்க்சியம் சொல்வது என்ன?” என்ற நூல் மார்க்சிய சிந்தனைகளை அறிமுகப்படுத்தும் முக்கியமான படைப்பாக அமைந்துள்ளது. மார்க்சி யத்தின் அடிப்படை கோட்பாடுகளை மிக எளிமையான முறையில் விளக்கும் இந்நூல், புதிய வாசகர்களுக்கு பெரும் பயனளிக்கும் வகையில் உள்ளது.  இந்நூலை படிக்கும்போது சில இடங்களில் இரண்டு மூன்று முறை படிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமான கருத்துக்களை கொண்டுள் ளது. மார்க்சியம் குறித்த சில அடிப்படை புரிதல்கள் இருந்தால் நூலை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.  நூலில் வர்க்கம் என்பது ஒரே மாதிரியான வழியில் வாழ்வாதாரம் தேடும் மக்கள் குழுக்கள் என விளக்கப்படுகிறது. நிலப்பிரபுத்துவ காலத்தில் நிலப்பிரபுக்களும் பண்ணை அடிமைகளும், தொழிற் புரட்சிக்குப் பின் முதலாளிகளும் தொழிலாளர்களும் என வர்க்க அமைப்புகள் மாறி வந்துள்ளன. இந்த  வர்க்கங்களுக்கிடையேயான நலன்கள் எப்போதும் முரண்பட்டே இருக்கின்றன.  மூலதனம் என்பது இயந்திரங்கள், கட்டிடங்கள், நிலம் மட்டுமல்ல என்றும், மனித உழைப்பும் மூலதன மாக கருதப்படுகிறது என்றும் நூல் விளக்குகிறது. ஒரு தொழிலாளியின் நான்கு மணி நேர உழைப்பே போது மானது, மீதமுள்ள உழைப்பு முத லாளிக்கு உபரி மதிப்பாக மாறுகிறது என்ற கருத்து முக்கியமானது.  முதலாளித்துவம் தனிச்சொத்து ரிமையை வலியுறுத்தும் போது, சோசலிசம் பொது உடைமையை ஆத ரிக்கிறது. உற்பத்தி சாதனங்கள் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சோசலிச கொள்கை. “ஒவ்வொருவரிட மிருந்தும் அவரவர் உழைப்பு, அவ ருக்கான ஊதியம்” என்ற கோட்பாடு முக்கியமானது. முதலாளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சியாக ஏகாதிபத்தியம் உருவானது. காலனி ஆதிக்கம் மூலம் வெளிநாடுகளை சுரண்டுவதே இதன் நோக்கம். லெனின் குறிப்பிட்ட ஐந்து பொருளாதார இயல்புகள் இதை விளக்குகின்றன. உலகில் எதுவும் நிலையானது இல்லை, அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டது என்ற இயக்கவியல் பார்வை யை நூல் விளக்குகிறது. தண்ணீர் ஆவியாகவும் பனிக்கட்டியாகவும் மாறுவதை எடுத்துக்காட்டாகக் காட்டு கிறது. நூலின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், கடின மான தத்துவக் கருத்துக்களை எளி மையாக விளக்கியுள்ளது. வரலாற்று நிகழ்வுகளுடன் கோட்பாடுகளை இணைத்துள்ளது. இன்றைய சூழலுக்கும் பொருந்தும் வகையில் கருத்துக்கள் உள்ளன. அறிவியல் பூர்வமான அணுகுமுறையும், வாசகர்களை சிந்திக்க வைக்கும் தன்மையும் கொண்டுள்ளது. சில இடங்களில் கருத்துக்கள் மிகவும் அடர்த்தியாக இருப்பதும், புரிந்துகொள்ள அதிக நேரம் தேவைப்படுவதும் சிறிய குறை பாடுகளாக கருதலாம். ஆனால் இவை நூலின் ஆழத்தை காட்டுவ தாகவே அமைந்துள்ளன. பேராசிரியர் வெ.பொன்னுராஜ் அவர்களின் தமிழாக்கம் மிகச் சிறப்பாக உள்ளது. மூல நூலின் கருத்துக்களை எந்த இழப்பும் இன்றி தமிழில் கொண்டு வந்துள்ளார். கடினமான கருத்துக்களை தமிழில் எளிமையாக விளக்கியுள்ளார். 

மார்க்சியம் சொல்வது என்ன?
விலை ரூ.90/  95பக்கங்கள் பாரதி புத்தகாலயம், சென்னை  தொடர்புக்கு 044 24332424

 

அகதிகள் என்று யாருமில்லை!  -  சு.வினோத்குமார்

வங்க இலக்கிய உலகில் “எழுத் தாளரின் எழுத்தாளர்” என அறியப்படும் தேபேஷ் ராய் அவர்களின் “உத்பாஸ்து” என்ற நூலை ஞா.சத்தீஸ்வரன் “அகதிகள்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நாவல், சிறுகதை, கட்டுரைகள் எழுதி சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்பாளி தேபேஷ் ராய், மேற்கு வங்க எல்லையோர மக்களின் அடையாள நெருக்கடியை இந்நாவலில் நுட்பமாக சித்திரித்துள் ளார். நூலின் தொடக்கம் மிகவும் சாதாரணமானது. படுக்கையறையில் காலை தேநீர் அருந்தும் வழக்கமான காட்சியுடன் ஆரம்பமாகிறது. “தேநீர்  தயாராகிடுச்சு, குடிச்சிட்டுப் போ, இல்லைனா ஆறிப்போகும்” என்ற  மனைவி அணிமாவின் வார்த்தை களுடன் சத்யப்ரதனின் அன்றைய நாள் தொடங்குகிறது. ஆனால் விடியற்காலையில் இரண்டு பேர் வந்து காவல் நிலைய விசாரணைக்கு வரும்படி அழைப்பதுடன் கதை திருப்பம் பெறுகிறது. “அசல் நபருக்கான தேடல்” என்ற பெயரில் சத்யப்ரதனின் அடையாளமே கேள்விக்குள்ளாக் கப்படுகிறது. பின்னர் அவரது மனைவி அணிமா மற்றும் மகள் அஞ்சனா வின் அடையாளங்களும் சந்தேகத் திற்குரியதாக மாறுகின்றன. அணிமா எனாமுல்லுடன் இருந்த உறவு, அஞ்சனாவின் உண்மையான பெற்றோர் யார் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்நூல் பல முக்கியமான அர சியல் பிரச்னைகளை பேசுகிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை யின் விளைவுகள், வட வியட்நாம்-தென் வியட்நாம், வட கொரியா-தென் கொரியா, கிழக்கு ஜெர்மனி-மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் நடந்த “அசல் நபருக்கான தேடல்” பற்றி பேசுகிறது. தேசிய அடையாளத்தின் சிக்கல்கள், எல்லைப்புற மக்களின் வாழ்வியல் பிரச்னைகள் ஆகிய வற்றை முன்வைக்கிறது. மனித உரிமைகள் மீதான தாக்குதல்களை நூல் அம்பலப் படுத்துகிறது. அரசு அதிகாரத்தின் கொடுமைகள், ஜனநாயக உரிமைகளின் மீறல்கள், மக்க ளின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுவது ஆகியவற்றை விமர்சிக்கிறது. “நான் யார்?” என்ற அடிப்படை கேள்விக்கே பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை காட்டுகிறது. நூலின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் நுட்பமான உள வியல் சித்தரிப்புகள். குடும்ப உறவு களின் நுணுக்கமான சித்தரிப்பு, எளிய மக்களின் வாழ்வியல் சிக்கல் களின் தெளிவான பதிவு ஆகி யவை குறிப்பிடத்தக்கவை. அரை நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட இந்நூல், இன்றைய குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற நடப்பு அர சியல் நிகழ்வுகளுடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. ஞா.சத்தீஸ்வரன் அவர்களின் மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பாக உள்ளது. வங்க மொழியின் நுட்பங் களை தமிழில் அப்படியே கொண்டு வந்துள்ளார். மொழிபெயர்ப்பு என்ற உணர்வே இல்லாமல் இயல்பான தமிழ் நடையில் எழுதியுள்ளார். வெறும் மொழிபெயர்ப்பாக இல்லா மல் படைப்பின் உணர்வுகளை அப்படியே கடத்தும் வகையில் அமைந்துள்ளது. மனித உரிமைகள், அடையாள அரசியல், குடியுரிமை பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கியமான படைப்பு இது. எளிய மக்களின் வாழ்வியல் பிரச்னை களை நுட்பமாக சித்திரிக்கும் இந்நூல் தமிழில் கிடைத்திருப்பது வாசகர்களுக்கு பெரும் பயனளிக்கும். அகதிகள் என்று யாருமில்லை, அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் மனிதநேய படைப்பு இது. 

அகதிகள் 
விலை ரூ.25 / 30 பக்கங்கள்
பாரதி புத்தகாலயம், சென்னை 
தொடர்புக்கு 044 24332924

 

 

அறிவியல் சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் உகந்த நூல்  - எம்.ஜே.பிரபாகர்

இயற்கையின் மீது காதல் கொண்ட மனிதர்கள் இன்னும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு உள்ளார் கள் என்பதை அறிந்து மனம் மகிழ்கிறது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பால் கவர் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?  கரும்பின் மூலம் எவ்வாறு சர்க்கரை தயாரிக்கப்படுகிறது?  வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் சர்க்கரை நோய் குறையும் என்ற நம்பிக்கை தவிடு பொடி. பெரிய வெற்றிக்கு காத்திராமல் அன்றாடம் கிடைக்கும் சிறிய வெற்றிகளை கொண்டாட நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவிட்டுள்ளார் நூலாசிரியர். மனிதன் நடந்து பழகினான். மாட்டு வண்டியில் பயணித்தான். தொடர்ந்து இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாக னம், ரயில் பயணம் அதைத் தொடர்ந்து விமான பயணமும் மேற்கொண்ட விஞ்ஞான வளர்ச்சியை காட்சிப்படுத்து கிறார்.  நம் பயணம் விமானத்தோடு மட்டுமல்ல இனிமேல் ராக்கெட் தொழில்நுட்ப மூலம் அண்டவெளியில் பயணிக்கும் காலம் நெருங்கி வருகிறது என்பதையும் நம்பிக்கையோடு பதிவிட்டுள்ளார் நூலாசிரியர். இந்த பூமி மனிதனுக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டுள்ளோம். இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்று தெளிவாக குறிப்பிடுகிறார்.  எனவே இயற்கை வளத்தை அழிக்கா மல் ஒவ்வொரு உயிரினத்தையும் பாது காக்க வேண்டும் என்பதை மிக அருமை யாக பதிவிட்டுள்ளார் நூலாசிரியர். இப்புத்தகம் 19 கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒரு தகவலை அழுத்தமாகச் சொல்கிறது.  முதல் கட்டுரை எளிமையான வாசிப்புடன் துவங்குகிறது. அடுத்தடுத்த கட்டுரைகள் நம்மை அசையவிடாமல், அசாதாரணமான தகவல்களை எளிமையாகச் சொல்லிச் செல்கிறது.  வாசிப்புக்கு இலகுவான மொழிப் பிரயோகம் என்பதால் எவரும் கைப்பிடித்துச் செல்ல வேண்டியதில்லை. சிக்கலான அறிவியல் கருத்துக்கள், ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை அறிவிய லில் பின்னணி இல்லாத வாசகர்களும்  எளிதில் அணுகக்கூடிய மொழியில் எழுதியுள்ளார் நூலாசிரியர். வாசிக்கத் தெரிந்த அனைவரும் இந்த நூலுக்கான வாசகர்கள்.  நூலை வாசித்து முடித்த பின்னர் நிறைய அறிவியல் தகவல்கள் நம்முள் அசைபோடு கின்றன. வாசிப்புக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கான விஷயங்களை யும் சில கட்டுரைகள் போதிக்கின்றன.  இந்த நூல் அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல அறிவியலை நேசிப்பவர்க ளுக்கும் குழந்தைகளுக்கும் மாணவர் களுக்கும் பெற்றோர்களுக்கும் அனை வரும் வாசித்தறிய வேண்டிய அரிய நூல்  இந்த நூல் தமிழ்நாடு கல்வித்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.  குறிப்பாக அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் இந்நூல் இடம் பெறுவது மிக மிக அவசியமாகும்.

கடலுக்கு அடியில் நகரம் நூலாசிரியர்கள்: முனைவர் பெ.சசிக்குமார், 
பொறியாளர் எம்.ஜோதிமணி விலை: ரூ.140 /-
பாரதி புத்தகாலயம், சென்னை.