tamilnadu

img

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

தேனி ,மே.22- தனியாருக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது, பாதிக்கப்பட்ட தொழிலாளர் அனைவருக்கும் கொரோனா நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,தொழிலாளர் நல அலுவலகம் ,நகராட்சி அலுவலகம் ,எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.முருகன் , மாவட்ட உதவி தலைவர் ஏ.கருப்பசாமி ,மாவட்ட துணை செய லாளர் ஜெயபாண்டி ,கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் பிச்சைமணி ,ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் பா.ராமமூர்த்தி ,தொமுச தலைவர்கள் முருகன், நாராயணன் ,எஸ்யுசிஐ மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டி 

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கை களை கண்டித்து ஆண்டிபட்டியில் சிஐடியு சார்பில்  ஏழு இடங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . பேரூராட்சி  அலுவலகம் முன்பு  ஊரகம் சார்பில் மா.குருசாமி தலைமை யிலும்  தேனி மெயின்ரோட்டில் ஆட்டோ தொழிலாளர்கள் மா.கணேசன் தலைமையிலும் சாலையோர வியாபாரி கள் சுப்புராஜ் தலைமையிலும் போக்குவரத்து  தொழிலா ளர்கள் வி.ஜெயசீலன் தலைமையிலும் கைத்தறி தொழி லாளர் சங்கம் சார்பில்  தங்கவேல் , விசைத்தறி சங்கம் சார்பில் மா.காமராஜ்  த லைமையிலும்   ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றிய செயலாளர் எஸ்.ராமர் , ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.மாரிமுத்து, சிஐடியு  மாவட்ட குழு உறுப்பினர் எஸ் .கோதண்டராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

கம்பம்

கம்பம் நகரில் அரசு போக்குவரத்து பணிமனைகள் ,எஸ்பிஐ ,கனரா,மாவட்ட மத்திய கூட்டுறவு  வங்கிகள் ,புதுப்பட்டி,அனுமந்தன்பட்டி ,கூடலூரில் நகராட்சி ,மின்வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பில் மாவட்ட துணைத்தலைவர் பி.முருகேசன் ,ஜெயன் ,ஆட்டோ சங்கம் நிர்வாகிகள் பாலகுருநாதன்,கே.ஆர் லெனின்,சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர்கள் எஸ்.கனகராஜ் ராஜா,சுமைப்பணி சங்கம் ஐய்யப்பன் மற்றும் ராஜேந்திரன்,தொ.மு.ச தலைவர் பிரகாஷ் ,ஏஐடியுசி தலைவர் எம்.அஜ்மல்கான் ,செங்குட்டுவன்,மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஏரியா செயலாளர் ஜி.எம் .நாகராஜன்,போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் மணிகண்டன் ,முத்துக்குமார்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர் . 

சின்னமனூர் 

சின்னமனூர் கிராம சாவடி ,ரவுண்டானா ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பில் மாவட்ட நிர்வாகி எஸ்.பொம்மையன் ,கே.எஸ்.ஆறுமுகம், ஏஐடியுசி சார்பில் தமிழ்ப்பெருமாள் ,காசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர் .

போடி 

போடியில் அரசு போக்குவரத்து பணிமனை  ,மின் வாரிய அலுவலகம் ,பிஎஸ்என்எல் அலுவலகம் ,தபால் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் ஏ.முருகவேல் ,தாலுகா செயலாளர் பி.சந்திரசேகர் , மாவட்டக்குழு உறுப்பினர் கணேஷ்ராம்,நாகராஜன் ,மற்றும் விருமாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ,தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் ,மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . தேவாரம் போக்குவரத்து பணிமனை ,பேரூந்துநிலை யம்,ஆகிய இடங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் மணிமாறன் சோலை,எம்.செல்வம்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

பெரியகுளம்

பெரியகுளத்தில் எல்ஐசி  ,தபால் நிலையம் ,போக்கு வரத்துக்கு பணிமனை ,வடுகபட்டி ,ஜெயமங்கலம் ,தேவ தானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன், சிஐடியு  அரசு  போக்குவரத்து திண்டுக்கல் கோட்ட பொதுச் ச்செயலாளர் என்.ராமநாதன் ,விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்ணன் ,கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சண்முகம் ,மாதர் சங்க  மாவட்ட செயலாளர் சு.வெண்மணி ,மன்னர் மன்னன் ,ஆர்,கே.ராமர், தொமுச தலைவர்கள் சுந்தரபாண்டி ,ஜெயவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   

 திண்டுக்கல்

திண்டுக்கல்லில்  நாகல்நகர், தலைமை அஞ்சலகம், பேகம்பூர் ஆகிய 3 மையங்களில்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப் அமைப்பின் சார்பாக ம. பசீர்அகமது தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன், எஸ். ஜெயமணி (ஏஐடியுசி), மோகன் (எம்.எல்.எப்), அழகர்சாமி (எல்பிஎப்), மணிவேல் (ஏஐசிசிடியு), கண்ணன (ஐ.என்.டி.யு.சி),  பசும்பொன் (பார்வர்டு பிளாக்),   ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 16 பேர் கைது செய்யப்பட்டனர்.  பேகம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜெயசீலன் (சிஐடியு), ராமமூர்த்தி (எல்.பி.எப்) ஆகியோர் தலைமை வகித்தனர். திண்டுக்கல் ரயில்வே நிலையம் முன்பாக டி.ஆர்.இ.யு சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காட்டுராஜா தலைமை வகித்தார். நாகல்நகரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு பிரபாகரன் (சிஐடியு), பாலு (எல்.பி.எப்), ராஜாங்கம் (ஏஐடியுசி), ஆகியோர் தலைமை வகித்தனர். பழனியில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிச்சைமுத்து (சிஐடியு), அய்யனார் (எல்.பி.எப்), ஆகியோர் தலைமை வகித்தனர். சின்னாளபட்டி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி.கே.முருகன் (சிஐடியு) தலைமை வகித்தார். இதே போல் திண்டுக்கல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பாக திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட  பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. (நநி)