தீக்கதிர் வாசகர் வட்ட
“அறிவோம் மார்க்சியம்” பயிற்சி பட்டறை
பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டத்தின் நான்காம் ஆண்டு தொடர் அறிவோம் மார்க்சியம் வகுப்பு நிகழ்ச்சி 22.02.2025 முதல் 29.03.2025 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் இந்த வார “அறிவோம் மார்க்சியம்” வகுப்பு மற்றும் இந்த மாத இறுதி வகுப்பானது சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எம். சக்திவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொதுச்செயலாளருமான சாமி.நடராஜன் கலந்து கொண்டு “உழகுடிகளின் உரிமை முழக்கம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்திய மாணவர் சங்க கிளைச் செயலாளர் சதீஷ்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், மாவட்ட செயற்குழு மருத்துவர் கருணாகரன், சமூக செயற்பாட்டாளர் மருத்துவர் ஜெயலட்சுமி கருணாகரன், மாவட்ட செயற் குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.