tamilnadu

img

ரயில்வேயில் ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் பணியா?

இந்திய ரயில்வே துறையிலுள்ள சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், அந்தப் பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு நிரப்பாமல் ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு நிரப்பும் ஒன்றிய அரசின் அரசாணையை எரிக்கும் போராட்டம் பழநி ரயில் நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) அகில இந்தியத் தலைவருமான ஏ.ஏ. ரஹீம் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் , மாநில நிர்வாகிகள் செல்வராஜ், சந்துரு, பாலாஜி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் முகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.