தூத்துக்குடி மாவட்டத்தில் வர லாறு காணாத பெருமழை யால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனி நபர்களின் வீடுகள் தண்ணீரில் மூழ்கி ஈடு செய்ய முடியாத பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளன. பொது நிறுவனங்களான பள்ளிக்கூடங்களும், மருத்துவமனை களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி சகதி யும், குப்பை மேடுகளாகவும் உள்ளன. அவற்றை அகற்றி துப்புரவு செய்யும் மகத்தான பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஈடு பட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக ஆத்தூர் உயர்நிலைப் பள்ளியிலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தூய்மை செய்து துயரினை துடை க்கும் பணியில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், மாநில தலை வர் எஸ்.கார்த்திக் தலைமையில் வாலி பர் சங்க தோழர்கள் ஈடுபட்டு வருகின்ற னர். ஆத்தூர் மேல்நிலைப் பள்ளியில் வாலிபர் சங்கத்தினர் செய்து வரும் பணி களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர் முகமது,
மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட தோழர்கள் பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பாக இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் மாநில செய லாளர் ஏ.வி.சிங்கார வேலன் கூறுகை யில், தென் மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தூத்துக் குடி, திருநெல்வேலி மாவட்டம் கடுமை யான பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளை பேரிடர் கால மீட்பு பணி களை ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 23ஆம் தேதி துவங்கி கடந்த 6 நாட்களாக புதன்கிழமை வரை யில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகரின் அனைத்து வார்டுகளில் இருக்கக்கூடிய குப்பை களை சுத்தம் செய்யும் தூய்மைப் பணி யை முன்னெடுத்தும், அதே போன்று கடந்த இரண்டு தினங்களாக தூத்துக் குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலை யம், அரசு மேல்நிலைப் பள்ளியில் சுத்தம் செய்யும் பணியினை ஈடுபட்டு வருகின்றோம்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கக்கூடிய மருத்துவ உபகர ணங்கள், மருத்துவ சாதனங்கள் உள்ளி ட்டவை கடுமையாக சேதமடைந்துள் ளன. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் புத்தகங்கள், பள்ளி தொடர்பான பல்வேறு முக்கிய பதிவு களும் தண்ணீரில் நனைந்து சேதமடைந் துள்ளன. இதனை சரி செய்யும் பணி யில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மயிலாடுதுறை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். தற்போது நாங்கள் மேற்கொள்ளக் கூடிய இந்த மகத்தான பணிக்கு பொதுமக்களும் ஆசிரியர்களும் பெரும் வரவேற்பை அளிக்கின்றனர். தற்போது நாங்கள் மேற்கொள்ளக் கூடிய பணியானது மிகவும் அவசிய மான பணியாக இருக்கிறது. மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் இதுபோன்று பல்வேறு பள்ளிகள் ,ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு பொது நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் அதனையும் நிறைவேற்றித் தருவதாக தெரிவித்துள்ளோம். பேரிடர் காலங்களில் தன்னார்வலர் கள் குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற பணியில் கூடுதலாக கவனம் செலுத்த, பங்களிப்பு அளிக்க வேண்டும்.
இதன் மூலம் பேரிடர் பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு எடுக்க முடியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொதுவான இளைஞர்கள் அனைவரும் பல்வேறு அமைப்புகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் இதுபோன்ற பணி களுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவிக்கையில், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வெள்ளம் சூழ்ந்து மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக பள்ளி யில் உள்ள கணினி உபகரணங்கள், நோட்டு புத்தகங்கள், பள்ளி வகுப்பறை கள், பள்ளி வளாகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இந்நிலையில் எங்களுடைய பள்ளி வளாகத்தையும் தூய்மைப்படுத்து வதற்காக நம்முடைய தோழர் சங்க ரய்யா அவர்களுடைய இயக்கத்தை சார்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் தூய்மைப் பணியில் இரண்டு நாட்களாக மிகவும் அர்ப்பணிப் போடு ஈடுபட்டு வருகின்றனர். மிகவும் சிரமப்பட்டு தூய்மை செய்து வருகின்றனர். மேலும் எங்களுடைய பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறியுள்ளனர். மேலும் இனி பள்ளி திறந்த பிறகு மாண வர்களுக்கு வழங்கக்கூடிய நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்குவதாக சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளி சார்பில் தலைமை ஆசிரியர் என்ற வகையில் மிகவும் அன்போடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.